பல மடங்கு லாபம் பார்த்த உதயநிதி.. பக்கா பிளான் போட்டுக் கொடுத்த அனிருத்

விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியால் கமல்ஹாசன் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். அதற்கு கொஞ்சமும் குறைவில்லாத சந்தோசத்தில் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்ட உதயநிதி ஸ்டாலினும் இருக்கிறார். இதன் மூலம் போட்ட பணத்தை விட பல மடங்கு லாபத்தை இருவரும் பார்த்துள்ளனர்.

தற்போது விக்ரம் திரைப்படத்தின் வெளியீட்டில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது உதயநிதி ஸ்டாலின் விக்ரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது இந்த படத்தின் உரிமையை நான் தான் கமல் சாரிடம் கேட்டேன் என்று வெளிப்படையாகக் கூறினார்.

ஆனால் உண்மையில் கமல் தான் முதலில் உதயநிதி ஸ்டாலினிடம் இந்த படத்தை வெளியிடுமாறு வற்புறுத்தினாராம். ஆனால் அவர் அப்போது இந்த படத்தை வாங்கி கொள்ள மறுத்துள்ளார். அதன் பிறகு இசையமைப்பாளர் அனிருத் கூறிய பிறகுதான் உதயநிதி மீண்டும் இந்த படத்தை வாங்க முன்வந்திருக்கிறார்.

உதயநிதியும், அனிருத்தும் நீண்ட காலமாகவே நெருங்கிய நண்பர்கள். அந்த நட்பின் அடிப்படையில் இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டபோது உதயநிதி, விக்ரம் திரைப்படத்தை வாங்க மறுத்தது குறித்து அனிருத்திடம் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்ட அதிர்ச்சியான அனிருத் இந்த படத்திற்கான ரீ ரெக்கார்டிங் வேலைகளை எல்லாம் நான்தான் பார்த்து வருகிறேன். படம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு அருமையாக இருக்கிறது. அதனால் இந்தப் படம் மிகப் பெரிய அளவில் லாபத்தை கொடுக்கும்.

உங்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பை விட்டுவிடாதீர்கள். கமல் சார் வாங்கச் சொன்னால் படத்தை தயங்காமல் வாங்கி விடுங்கள் என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு உதயநிதி, கமலுக்கு போன் போட்டு விக்ரம் திரைப்படத்தை வாங்கி வெளியிடுவதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

தற்போது படம் வெளியாகி பல மடங்கு லாபத்தை கொடுத்துள்ளது. அந்த வகையில் உதயநிதி இதுவரை வாங்கி வெளியிட்ட படங்களிலேயே அதிக லாபத்தைக் கொடுத்த திரைப்படம் விக்ரம் படமாக மட்டும் தான் இருக்க முடியும். இதனால் கமலை போல் உதயநிதியும் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்