எனக்கு வேற வழி தெரியல.. வாய்ப்பில்லாமல் 7 வருடத்திற்கு பிறகு மீண்டும் அங்கு செல்லும் திரிஷா

என்னதான் நயன்தாராவுக்கு இணையாக திரிஷா நீண்ட காலமாக சினிமாவில் தாக்குப் பிடித்தாலும் நயன்தாரா ரேஞ்சுக்கு வரவில்லை என்பதே உண்மை. திரிஷாவும் முட்டி மோதி பல படங்களில் நடித்து பார்த்துவிட்டார்.

ஆனால் இளம் ரசிகர்கள் மத்தியில் நயன்தாராவுக்கு இருக்கும் வரவேற்பு திரிஷாவுக்கு மிஸ்ஸிங். திரிஷாவை பெரும்பாலும் கமர்சியல் நாயகியாகவே பார்த்த தென்னிந்திய சினிமா தற்போது கதையின் நாயகியாக பார்க்க ரெடியாக இல்லை போல.

இதன் காரணமாகவே திரிஷா சோலோ ஹீரோயினாக நடித்த படங்கள் மண்ணை கவ்வியது. மேலும் சில படங்கள் தோல்வியை தழுவியதால் அவர் நடித்த ஏகப்பட்ட படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

இப்படி திரும்பிய பக்கமெல்லாம் நல்லது நடக்காமல் தடுமாறும் திரிஷா தற்போது வேறு வழியே இல்லாமல் ஏழு வருடங்களுக்கு பிறகு கன்னட சினிமாவுக்கு செல்ல உள்ளார். தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்திருந்தாலும் திரிஷா இதுவரை கன்னடத்தில் ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார்.

புனித் ராஜ்குமார் நடித்த பவர் என்ற படத்தில் 2014 ஆம் ஆண்டு நடித்தார். அதன் பிறகு தற்போது மீண்டும் அதே புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இதற்கெல்லாம் காரணம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் எதிர்பார்த்த வாய்ப்புகள் இல்லை என்பதால்தானாம்.

ஒரு காலத்தில் என்னுடைய காலடியிலேயே சுற்றிக் கிடந்த தயாரிப்பாளர்களும் நடிகர்களும் தற்போது தன்னை ஏறெடுத்து கூட பார்ப்பதில்லை என்ற வருத்தத்தால் திரிஷா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறுகின்றனர்.

trisha-cinemapettai-01
trisha-cinemapettai-01
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்