திமிராக நடந்து கொள்ளும் திரிஷா.. குடும்பத்தைப் பற்றி விளாசிய பிரபல தயாரிப்பாளர்

திரிஷா கிருஷ்ணன் தமிழ், தெலுங்குத் திரைப்பட உலகில் முன்னணி நடிகை . சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார் . திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் தமிழ் திரைப்பட உலகில் நீண்ட காலம் நிலைத்து நின்ற மிகச்சில கதாநாயகிகளில் ஒருவர். இவர் தற்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இவர் கடைசியாக நடித்த நாயகி, மோகினி மற்றும் பரமபதம் விளையாட்டு ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற தவறியது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை திரிஷா தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார்.

நடிகை திரிஷா குறித்து தயாரிப்பாளரும் நடிகருமான கே.ராஜன் அவர்கள் சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் நடிகை திரிசா தான் நடித்த திரைப்பட விளம்பரங்களுக்கு வருகை தருவதில்லை, இதனால் தயாரிப்பாளர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள் என்று சொன்னார்.

k rajan
k rajan

மேலும் இதற்கான காரணம் குறித்து அவரிடம் கேட்டபோது அவர் பின்வருமாறு கூறினார் : நடிகை திரிஷா மிகவும் திமிர் பிடித்தவர், திரிஷா தனது நடிப்புத் திறனை எந்த வகையிலும் வளர்த்துக்கொள்ளவில்லை . அனால் அவரின் சம்பளம் மட்டும் ஏறிக்கொண்டே இருக்கிறது.

அவர் நடித்த திரைப்படங்களின் விளம்பரத்துக்கு வருமாறு தயாரிப்பாளர் சங்கம் வாயிலாக அழைப்பு விடுத்தால், திரிஷாவின் தாயார் நீங்கள் எங்களை மிரட்டுகிறீர்கள் எங்களால் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க முடியாது என்று அடாவடியாக பதில் சொல்கிறார். சில நேரங்களில் நடிகை திரிஷா ஒப்புக் கொண்டாலும் அவரின் குடும்பத்தார் தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்புத் தர மறுக்கிறார்கள் என்று கே ராஜன் விளக்கமளித்தார்.

இது நடிகை திரிஷா ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்