பூமராங் போல் திரும்பி வரும் துரோகங்கள்.. மீண்டும் தனுஷை பதம்பார்த்த சிவகார்த்திகேயன்

வினை விதைப்பவன் வினை அறுப்பான், திணை விதைத்தவன் திணை அறுப்பான் என்ற பழமொழிக்கேற்ப நடிகர் தனுஷ் செய்த துரோகம் தற்போது அவருக்கே திரும்பி உள்ளது.

சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் தன் 10 ஆண்டு கால சினிமா வாழ்க்கையின் வெற்றி குறித்த அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டிருந்தார். அதில் அவருக்கு வாய்ப்பளித்த திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். ஆனால் அந்த அறிக்கையில் நடிகர் தனுஷின் பெயர் மட்டும் குறிப்பிடபடவில்லை.

இதனிடையே தனுஷின் தயாரிப்பில் எதிர்நீச்சல் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வெற்றி பெற்ற சிவகார்த்திகேயன், அதன்பின் பல திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்றார். இதனிடையே தற்போது சிவகார்த்திகேயன் தனுஷின் பெயரை அந்த அறிக்கையில் குறிப்பிடாதால், செம காண்டில் உள்ள தனுஷ், சிவகார்த்திகேயனுக்கு கொஞ்சம் கூட நன்றியே இல்லை என தனுஷ் புலம்பி வருகிறார்

ஆனால் இதே போலவே, நடிகர் தனுஷும் தன் 20 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் வெற்றி குறித்து வெளியிட்ட அறிக்கையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயரை குறிப்பிடாமல் இருந்தார். தன் மகளை தனுஷிற்கு திருமணம் செய்து வைத்து ஆரம்ப கால தனுஷின் சினிமா வாழ்க்கையில் பெருமளவில் பங்காற்றியவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

ஆனால் தன் விவாகரத்துக்குப் பின், தனுஷ் வெளியிட்ட 20 ஆண்டுகால அறிக்கையில் அதில் ரஜினிகாந்த்தின் பெயரை குறிப்பிடாமல் இருந்த தனுஷ், அனைவராலும் நன்றி கெட்டவர் என்ற பெயரை வாங்கினார். ஆனால் சிவகார்த்திகேயன் தனுஷுக்கு நன்றி இல்லாமல் நடந்துகொண்டது கோலிவுட் வட்டாரத்தில் பேசும் பொருளாகியுள்ளார் தனுஷ்.

இதனிடையே துரோகம் செய்தால் துரோகத்தால் தான் அழிவோம் என்ற பழமொழிக்கேற்ப, தனுஷ் எப்படி சூப்பர் ஸ்டாருக்கு நன்றி இல்லாமல் நடந்து கொண்டாரோ, அதேபோல சிவகார்த்திகேயன் தற்போது தனுஷுக்கு நன்றி இல்லாமல் நடந்து கொண்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்