கடும் விமர்சனத்தை சந்தித்த விஜய் டிவி சீரியல்! அதே சீரியலில் நடிக்க கிளம்பிய டிஆர்!

பொழுதுபோக்கிற்கு பஞ்சமில்லாத விஜய் டிவியானது, சுவாரசியமான கதைக்களத்துடன் கூடிய சீரியல்களை ஒளிபரப்பு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இன்னிலையில் கடந்த வாரம் புதிதாக தொடங்கப்பட்ட ‘தென்றல் வந்து என்னை தொடும்’ என்ற சீரியல் ஆனது சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் சந்தித்தது.

ஏனென்றால் சீரியல் தொடங்குவதற்கு முன்பே வெளியான ப்ரோமோ தான் அதற்கு காரணம். அதில், அமெரிக்காவில் படித்துவிட்டு வந்த இந்திய கலாச்சாரத்தை பின்பற்றும் பெண்ணை, உள்ளூர் ரவுடியான கதாநாயகன், கோவிலில் வைத்து வலுக்கட்டாயமாக தாலி கட்டி, ‘அது ஒரு வெறும் மஞ்சள் கையில் தானே, அதைக் கட்டினால் நீ என்னுடைய பொண்டாட்டி ஆகி விடுவியா?’ என்று பேசி இருக்கும் ப்ரோமோ வெளியாகி,

பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டை தூண்டுவதாக மீடியாக்களில் சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஆனாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விஜய் டிவி பொழுதுபோக்கும் கண்ணோட்டத்தோடு தொடர்ந்து அந்த சீரியலை ஒளிபரப்பு செய்து வருகிறது.

தற்போது இந்த சீரியலின் கதாநாயகியான பவித்ரா மற்றும் துணை நடிகை சமந்தாவுடன், சினிமா திரை உலகின் ஜாம்பவானாக கருதப்படும் டி. ராஜேந்திரன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்திருக்கும் புகைப்படமானது தற்போது விஜய் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

vijay-tv-serial
vijay-tv-serial

பொதுவாக அடுக்குமொழி வசனத்திற்கும், நடிப்பிற்கும் பெயர்போன டி. ராஜேந்திரன் சமீபகாலமாக சீரியல்களிலும், ரியாலிட்டி ஷோக்களும் பங்கேற்று வருகிறார். ஒருகாலத்தில் இயக்கம், வசனம், திரைக்கதை, நடிப்பு என பல்வேறு கோணங்களில் தன்னுடைய திறமையை வெளிக்காட்டியிருந்த டி.ஆர் தற்போது சின்னத்திரையிலும் கலக்க விருக்கிறார்.

டி.ஆரை இந்த சீரியலில் நடிக்க வைப்பதன் மூலம் மக்கள் மத்தியில் புது சீரியலை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் விஜய்டிவி இந்த முயற்சியை கையாண்டுள்ளது. அந்தவகையில் தற்போது விஜய் டிவியின் ‘தென்றல் வந்து என்னை தொடும்’ சீரியலில் டி.ஆர் நடிக்கப்போவதால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்