பொம்பள புள்ள வச்சிருக்கவங்க சூதானமா இருங்க.. டாப் ஹீரோவை கழுவி ஊற்றி மனைவி போட்ட மெசேஜ்

தற்போது இளம் ஹீரோ ஒருவரின் திரை மறைவு விஷயம்தான் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த நடிகர் இப்படிப்பட்டவரா, நிச்சயம் இருக்காது என்று சப்போர்ட் செய்தவர்கள் கூட இப்போது இந்த விவகாரத்தை நம்ப முடியாத அதிர்ச்சியில் இருக்கின்றனர். அந்த அளவுக்கு விஷயம் கைமீறி போயிருக்கிறது.

இருந்தாலும் தன் மீது பட்ட கறையை துடைக்கும் முயற்சியில் ஹீரோ தீயாக வேலை செய்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க டாப் நடிகர் ஒருவர் சிறு வயது பெண்களை கூட விடாமல் வளைத்துப் போட்டு வருகிறாராம். சாதாரணமாகவே இந்த விஷயத்தில் கொஞ்சம் வீக்காக இருக்கும் நடிகர் சக நடிகைக்கு வீடு எடுத்து கொடுத்து குடித்தனம் நடத்தி வந்தார்.

இந்த விவகாரம் கிசுகிசுவாகவே வெளிவந்திருக்கிறது. ஆனால் அதையெல்லாம் தாண்டி இப்போது நடிகர் செய்யும் வேலை தான் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது நண்பரின் வீட்டில் இருக்கும் இளம் பெண்களை கூட அவர் விட்டு வைப்பது கிடையாதாம்.

இதெல்லாம் மனைவிக்கு தெரியாமல் பார்த்துக் கொண்ட நடிகர் இப்போது வசமாக சிக்கி இருக்கிறார். இப்படி அவருடைய சேட்டை அதிகமாக போனதில் கடுப்பான சிலர் விஷயத்தை பத்த வைத்திருக்கிறனர். உடனே பத்ரகாளியான நடிகரின் மனைவி இது பற்றி கேட்டிருக்கிறார். அதற்கு நடிகர் கொடுத்த விளக்கம் தான் அவரை கடுப்பாக்கி இருக்கிறது.

நானா எங்க போறேன், எல்லாம் என்னை தேடி வராங்க, நான் என்ன செய்ய முடியும் என்று சப்பை கட்டு கட்டி இருக்கிறார். அதைக் கேட்டு ஆக்ரோஷமான மனைவி இனிமேல் எப்படி வெளில போறீங்கன்னு பாக்குறேன் என சபதம் போட்டிருக்கிறார். அதை தொடர்ந்து நடிகரின் நட்பு வட்டாரங்களுக்கு ஒரு மெசேஜையும் தட்டி விட்டிருக்கிறார்.

அதாவது பொம்பள புள்ள வச்சிருக்கவங்க சூதானமா இருங்க. அதிலும் 15 வயசுக்குள்ள பெண் இருக்கிறவங்க என் வீட்டுக்காரரை உள்ள சேக்காதீங்க என்று அனுப்பி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் மனைவியையும் பத்திரமா பார்த்துக்கோங்க என்று கூறி இருக்கிறார். இதனால் நடிகர் இப்போது வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு நொந்து போய் இருக்கிறாராம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்