மீண்டும் பேட்ட கூட்டணியில் உருவாகும் தலைவர் 169.. விட்டதைப் பிடிக்க வெறித்தனமாக வேட்டையாட களமிறங்கும் ரஜினி

கோலிவுட்டில் ‘சூப்பர் ஸ்டார்’ என்ற கௌரவத்துடன், தற்போது வரை  கெத்தாக வலம் வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு படத்தையும் அவருடைய ரசிகர்கள் பூஜித்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு இவருடைய நடிப்பில் வெளியான ‘பேட்ட’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல் வசூல் ரீதியாக பெரும் சாதனையையும் புரிந்தது. ஏனென்றால் பேட்ட திரைப்படத்தில் வேற லெவலில் சூப்பர் ஸ்டாரை காணமுடிந்தது.  அவ்வளவு ஒரு ஸ்டைல் அவ்வளவு ஒரு மாசான டயலாக்ஸ் என தரமாக இருந்தார் தலைவர்.

அதேபோன்று பேட்ட படத்தை எத்தனை முறை பார்த்தாலும் யாருக்கும் சலிக்காது. அந்த அளவிற்கு ஒவ்வொரு பிரேமிலும் வித்தை காட்டி இருப்பார் கார்த்திக் சுப்புராஜ்.

இந்த நிலையில் ‘தலைவர் 169’ படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஏற்கனவே ‘தலைவர் 169’ படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ், தலைவர் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுவரை இது பற்றி எந்தவித அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை என்றும், ஆனால் கார்த்திக் சுப்புராஜ் சியான் விக்ரமை வைத்து இயக்கும் ‘விக்ரம் 60’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ரஜினிகாந்தை வைத்து படமெடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர் விபரமறிந்தவர்கள்.

அதுமட்டுமல்லாமல், இந்த படத்தைப் பற்றிய பேச்சு வார்த்தை லாக் டவுனில் நடத்தப்பட்டதாகவும், கலந்த பிக்சர்ஸ் நிறுவனம், ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ் ஆகிய மூவரும் இதற்கு ஒப்புதல் தெரிவித்ததாகவும், வருகின்ற 2022ஆம் ஆண்டு முதல் பாதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு அந்த ஆண்டு தீபாவளி அன்று ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே இந்த முப்பெரும் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை எதிர்நோக்கி ரசிகர்கள் பலர் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்