கல்யாணம் வரை வந்து பிரிய இதான் காரணமாமே.. ஆசை வார்த்தை கூறி நடிகையை ஏமாற்றிய இயக்குனர்

புகழின் உச்சியில் இருக்கும் நடிகை ஒருவர் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாத ராணியாக இருக்கிறார். ஆனாலும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத அம்மணி இப்போது கொடி கட்டி பறந்து வருகிறார். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் இவர் சந்திக்காத பிரச்சினைகளே கிடையாது.

அதிலும் அந்த இயக்குனரை நம்பி கடைசியில் ஏமாந்து போன நடிகையின் கதை ஊருக்கே தெரியும். ஆனால் கல்யாணம் வரை முடிவு செய்து பிறகு இருவரும் பிரிய என்ன காரணம் என பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால் நடிகை அந்த சம்பவங்களை நினைத்து கூட பார்க்க விரும்பவில்லை.

அந்த அளவுக்கு இயக்குனர் அவருக்கு பெரும் துரோகத்தை செய்து இருக்கிறார். என்னவென்றால் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை குட்டி என்று இருந்த அந்த இயக்குனரின் மேல் அம்மணிக்கு எப்படி தான் காதல் வந்ததோ தெரியவில்லை. பசை போட்டு ஒட்டியது போல் இயக்குனரின் கூடவே திரிந்தார்.

Also read: தங்கைக்காக அக்கா செய்த அட்ஜஸ்மென்ட்.. வாய்ப்பால் உச்சத்தை தொட்ட நடிகர்

ஒரு கட்டத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்த நடிகை இதை காதலனிடம் கேட்டிருக்கிறார். ஆனால் அவர் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுத்து விவாகரத்து செய்ய வேண்டும் என தூண்டில் போட்டு இருக்கிறார். அதை அப்படியே நம்பிய நடிகையும் சம்பாதித்த பணத்தில் முக்கால்வாசியை தூக்கிக் கொடுத்திருக்கிறார்.

அதைத்தொடர்ந்து விவாகரத்தும் நடந்தது. ஆனாலும் இயக்குனர் திருமணம் பற்றி வாயை திறக்காமல் நடிகையின் காசில் சொகுசாக இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் நடிகைக்கு இவர் தன்னை ஏமாற்றுகிறார் என தெரிய வந்ததால் தான் அந்த உறவை முறித்துக் கொண்டாராம்.

Also read: அட்ஜெஸ்ட்மென்ட் டீலில் கொடி கட்டி பறந்த சிரிப்பு நடிகை.. விஷயம் தெரிஞ்சு கழட்டி விட்ட ஹீரோ

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்