சூர்யா விஷயத்தில் மூக்கை நுழைத்த இருவர்.. கடுப்பில் படப்பிடிப்பை நிறுத்திய பாலா

நடிகர் சூர்யா 2டி என்டர்டைன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இதன் மூலம் அவர் ஜெய் பீம், சூரரை போற்று போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இப்பொழுது சூர்யா, பாலாவின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அந்தப் படத்தையும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம்தான் தயாரிக்கிறது. இந்த நிறுவனத்தை பார்த்துக் கொள்வதற்காக சூர்யா இரண்டு முக்கிய நபர்களை நியமித்து உள்ளார். அவர்கள்தான் சூர்யாவுக்கு எல்லாமுமாய் இருந்து இந்த தயாரிப்பு நிறுவனத்தை திறமையாக நடத்தி வருகின்றனர்.

அதில் ஒருவர் சூர்யாவுடன் கல்லூரியில் இணைந்து படித்த நண்பர், மற்றொருவர் பள்ளிக் காலத்திலிருந்தே நெருக்கமாக இருப்பவர். இவர்கள் இருவரும் தான் படத்திற்கு சகலமும் ஆக இருந்து சூர்யா மற்றும் பாலாவின் மனது கோணாமல் ஷூட்டிங்கை நடத்தி செல்கின்றனர்.

இப்பொழுது பாலா மற்றும் சூர்யா இடையே சில மனக்கசப்புகள் ஏற்பட்டு உள்ளது. இதனால் படப்பிடிப்பு பாதியிலேயே நின்று விட்டதாகவும் ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இந்த சம்பவத்திற்கும் சூர்யாவின் நண்பர்களுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமா என்ற ரீதியில் தற்போது பேசப்பட்டு வருகிறது.

ஏனென்றால் பாலா சூட்டிங் ஸ்பாட்டில் அனைவரையும் எப்படி வேலை வாங்குவார் என்பது தெரிந்த கதைதான். அப்படி கோபக்கார இயக்குனரை அவர்கள் இருவரும் இன்னும் கோபப்படுத்தி விட்டார்களா அல்லது அவர்களின் தலையீடு பிடிக்காததால் பாலாவுக்கு மனவருத்தம் ஏற்பட்டதா என்று தெரியவில்லை.

ஒருவேளை அவர்கள் தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்றால் எப்போது இந்த பிரச்சனை முடிவுக்கு வந்து படப்பிடிப்பு தொடங்கும் என்பது புரியாத புதிராக இருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் தற்போது பிரச்சனையில் இருப்பதை நினைத்து சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த கலக்கத்தில் இருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்