அஜித் பட இயக்குனருக்கு கிடைக்கப்போகும் மிகப்பெரிய அங்கீகாரம்.. கொண்டாடும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளர் நட்ராஜ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சதுரங்க வேட்டை படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் வினோத். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அறிமுகமான முதல் படத்திலேயே தனது திறமையை நிரூபித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் பட்டியலில் வினோத் இணைந்தார்.

இதைத் தொடர்ந்து இரண்டாவது படமாக தீரன் அதிகாரம் ஒன்று என்ற கதையை கையில் எடுத்தார். இப்படத்தில் முன்னணி நடிகரான கார்த்தி காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். பல்வேறு திருப்பங்களுடன், எதிர்பாராத காட்சிகளுடன் படமாக்கப்பட்டிருந்த இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது.

இந்நிலையில் தீரன் அதிகாரம் ஒன்று படம் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனர் ஆகிய பிரிவுகளில் விருதுகளுக்காக பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இப்படம் நிச்சயம் விருதுகளை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை ரசிகர்கள் எதிர்பார்ப்பது போல் இப்படம் பிலிம்பேர் விருதை வென்றால் இயக்குனர் வினோத் மேலும் பிரபலமாகி விடுவார். ஏற்கனவே அவரது இயக்கத்தில் வெளியாகும் அனைத்து படங்களும் வெற்றி பெற்று வருவதால், வினோத் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் ஆவலாக உள்ளனர். தற்போது விருது வென்றால் அவரது மார்க்கெட் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

theeran
theeran

இயக்குனர் வினோத் தற்போது அஜித் நடித்து வரும் வலிமை படத்தை இயக்கி முடித்து உள்ளார். இப்படத்திற்காக அஜித் நடிகர்கள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக காத்துக்கொண்டிருக்கின்றனர். வலிமை படம் எப்போது திரைக்கு வரும் என்பதே தற்போது ரசிகர்களின் ஒரே கேள்வியாக உள்ளது.

வினோத் ஏற்கனவே அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற படத்தை இயக்கி உள்ள நிலையில் தற்போது வலிமை படத்தின் மூலம் இரண்டாவது முறையாக கூட்டணி வைத்துள்ளார். இந்நிலையில் மீண்டும் மூன்றாவதாக அஜித்துடன் புதிய படம் ஒன்றில் இணைய உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்