சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் முட்டி மோதி ஜெயித்து காட்டிய கடைக்குட்டி சிங்கம் அக்கா.. சோகமான மறுபக்கம்

Tamil Actress: என்னதான் கடின உழைப்பை போட்டாலும் நேரம் காலம் வந்தால் நம்முடைய வாழ்க்கை டாப்பில் வந்துவிடும் என்று சொல்வது உண்மைதான். எந்த அளவுக்கு திறமை இருக்கிறதோ அதற்கு ஏற்ற மாதிரி முயற்சி எடுத்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு உதாரணமாக கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்த அக்கா ஒருவரைப் பற்றி சொல்லலாம்.

இவர் சின்னத்திரை நாடகமான மெட்டிஒலி நாடகத்தில் மீனா என்ற கேரக்டரில் அறிமுகமானார். அதன் பின் மலர்கள், கோலங்கள், மேகலா, கார்த்திகைப் பெண், வாணி ராணி போன்ற பல சீரியல்களில் நடித்து வந்தார். இதற்கிடையில் அவ்வப்போது வெள்ளித்திரையிலும் நடிக்க ஆரம்பித்தார்.  அவர் யார் என்றால்  கடைசி குட்டி சிங்கம் படத்தில் நடித்த தீபா அக்கா.

Also Read: டாப் ஹீரோவின் மார்க்கெட்டை சல்லி சல்லியாக நொறுக்கிய ஜெயிலர்.. நூறிலிருந்து 650 தியேட்டர்களை உயர்த்திய சம்பவம்

அப்படி இவர் நடிக்க ஆரம்பித்த முதல் திரைப்படம் மாயாண்டி குடும்பத்தார். இதில் மாயாக்கா என்ற கேரக்டரில் நடித்திருப்பார். அதன் பின் வெடிகுண்டு முருகேசன் என்ற படத்தில் சுயநினைவு இல்லாத பொன்னி கேரக்டரில் நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து கிடாரி, கடை குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை, டாக்டர் போன்ற படங்களில் நடித்து பரிச்சயம் ஆகிவிட்டார்.

அதன்பின் தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி ஷோவில் நடித்ததன் மூலம் பிரபலமாகிவிட்டார். முக்கியமாக குக் வித் கோமாளி சீசன் 2வில் கலந்து கொண்ட பின் அனைவரது கவனத்தையும் பெற்றுவிட்டார். இதன் மூலமாக மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 3, காமெடி ராஜா கலக்கல் ராணி போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்று இவருக்கான அங்கீகாரத்தை தக்க வைத்துக் கொண்டார்.

Also Read: 8000 பேர் உயிரைக் காப்பாற்றும் விஜய் டிவி பிரபலம்.. இதுவும் ஒருவிதமான போதை தான்

இவருடைய மிகப்பெரிய பிளஸ் வெள்ளந்தியான பேச்சும், கள்ள கபடமற்ற சிரிப்பும், எதார்த்தமான வாழ்க்கையும் அனைவரையும் அதிக அளவில் கவர்ந்தது. அப்படிப்பட்ட இவருடைய மறு பக்கத்தில் கொஞ்சம் சோகமான விஷயங்களை கடந்து வந்திருக்கிறார். அதாவது இவரது குடும்பத்தில் கடைசி பிள்ளையாக பிறந்து ஓட்டுநரை திருமணம் செய்து இருக்கிறார். ஆனால் அதற்கு முன் பரதநாட்டியத்தில் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

அப்படிப்பட்ட இவர் சினிமாவில் நுழைந்த பொழுது இவருக்கான அங்கீகாரம் கிடைக்காமல் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் கஷ்டப்பட்டு இருந்திருக்கிறார் . ஒவ்வொரு நாளும் அம்மாவிடம் அழுது கொண்டே நாட்களை கடந்து வந்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் இவரை பார்த்து உருவக் கேளியும் செய்து நக்கல் அடித்தவர்கள் பலரும். ஆனால் அதையெல்லாம் தாண்டி தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிரபலமாகி இவருக்கான அங்கீகாரத்தை தேடிப் பிடித்து விட்டார்.

Also Read: எதிர்நீச்சலை காலி பண்ண விஜய் டிவி போட்ட பலே திட்டம்.. முக்கிய கேரக்டரை தூக்க நடந்த சதி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்