உதயநிதியின் படப்பிடிப்பில் பேரறிவாளன்.. கண்ணீர் விட்டு கலங்கிய படக்குழு

உதயநிதி ஸ்டாலின் அரசியலில் களமிறங்கியதில் இருந்து பல நல்ல விஷயங்களை மக்களுக்காக செய்து அசத்தி வருகிறார். இப்போது எங்கே திரும்பினாலும் அவரைப்பற்றிய பேச்சுதான் ஓடிக்கொண்டிருக்கிறது. சினிமாவில் மட்டும் அல்லாமல் தற்போது எல்லா பக்கமும் அவர் தன்னுடைய முத்திரையை பதித்து வருகிறார்.

தற்போது உதயநிதி, மாரி செல்வராஜ் இயக்கத்தில் மா மன்னன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்முதலாக இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சேலத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல வருடங்களாக சிறையில் இருந்தவர் பேரறிவாளன். அவர் இப்பொழுது தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுதலையாகியுள்ளார். அவர் சிறையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று அவரின் தாய் பல காலமாக போராடி வந்தார்.

அதற்கு உதயநிதி ஸ்டாலின் நிறைய உதவி செய்துள்ளார். இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த பேரறிவாளன் உதயநிதியை சந்திக்க ஆசைப்பட்டுள்ளார். அதனால் அவர் மாமன்னன் பட ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு நேரடியாக சென்று இருக்கிறார்.

அங்கு சென்ற அவர் உதயநிதியை சந்தித்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து பேசியிருக்கிறார். அவர் கண்ணீர் விட்டு கதறியதை பார்த்த மொத்த படக்குழுவும் கண்கலங்கி இருக்கிறது. இந்த விஷயம் தற்போது மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் உதயநிதி பொது மக்களுக்காக செய்யும் பல நல்ல விஷயங்களும் அவருக்கு மக்களிடம் ஒரு நல்ல மரியாதையை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் தன்னை சந்திக்க வரும் மக்களிடம் அவர் அன்பாக பேசுவதும் பலரையும் கவர்ந்துள்ளது. இதன்மூலம் அவர் அரசியலில் ஒரு நல்ல இடத்திற்கு வரவேண்டும் என்று பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்