பிக் பாஸில் கடைசியில பணப்பெட்டியை தூக்கிய கல்லுளிமங்கன்.. 12 லட்சத்துடன் எஸ்கேப்

இறுதி கட்டத்தை எட்டி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஆரம்பத்தில் இருந்தே பல விறு விறுப்புகளை கூட்டி ஒளிபரப்பாகி வருகிறது. அதில் யாரும் எதிர்பாராத ஒன்று நடிகர் சரத்குமார் பண பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தது.

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு முதலில் 3 லட்சம் மதிப்புள்ள பண பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறலாம் என்ற வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் யாரும் பெட்டியை எடுக்காத காரணத்தினால் பிக்பாஸ் அந்தப் பணத்தை உயர்த்தி 7 லட்சம் வரை அறிவித்தார்.

இதனால் போட்டியாளர்களுக்கு இடையே சிறு சலசலப்பு ஏற்பட்டது. அதை இன்னும் கொஞ்சம் உயர்த்தி அதிகமாக கொடுத்தால் யோசிக்கலாம் என்று அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர் . பணப்பெட்டியை வைக்கும் போதே தாமரை, எவ்வளவு பணம் கொடுத்தாலும் நான் அதை எடுக்க மாட்டேன் என்று கூறினார்.

மேலும் அமீர் கோல்டன் டிக்கெட்டை பெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்வதால் அவருக்கு அந்த பணத்தை எடுக்க வேண்டிய அவசியமில்லை. மீதமிருக்கும் நபர்களில் நிரூப், ராஜு மற்றும் பவானி ரெட்டி ஆகியோர் அந்த பணத்தை எடுத்து செல்லும் வாய்ப்பு உள்ளது.

25 லட்சம் வரை பணத்தை உயர்த்தி தருவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், தற்போது பிக் பாஸ் அப்பணத்தை 12 லட்சமாக மாற்றியுள்ளார். இந்நிலையில் தற்போது பணத்தை யார் எடுத்துச் சென்றார் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பவானி ரெட்டி தற்போது பிக்பாஸ் வீட்டில் நடக்கும் போட்டிகளில் முழு மனதுடன் ஈடுபட முடியாமல் மிகவும் சோர்வுடன் இருக்கும் இருக்கிறார்.

மேலும் ராஜு பிக் பாஸ் வீட்டில் நடக்கும் போட்டிகளில் மற்றவர்களுக்கு விட்டு தருகிறார் என்ற ஒரு பேச்சு நிலவுகிறது. இதை ராஜூவும் பலமுறை ஆமோதித்துள்ளார். இதனால் அவர் இந்த பணத்தை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

இவர்களில் ஒருவர்தான் பணப்பெட்டியை எடுப்பார்கள் என்று அனைவரும் கருதிய நிலையில் தற்போது அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் விதமாக சிபி அந்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறியுள்ளார். இந்த சீசன் முழுவதும் அவருக்கு ஆதரவளித்து அவரை காப்பாற்றி வந்த அவரது ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை கொடுக்கும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்