ரேகாவை தொடர்ந்து அடுத்து என்ட்ரி யார் தெரியுமா? வெண்பாவின் ஆட்டத்தை முடித்த தாய்க்கிழவி

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் ஒன்பது வருடங்களாக தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாழவிடாமல் பாரதியை வெண்பா தன் கைக்குள் வைத்திருக்கிறாள். அப்படி இருந்தும் பாரதியை திருமணம் செய்து கொள்ள மட்டும் வெண்பாவால் முடியவில்லை.

அமெரிக்காவில் பாரதியுடன் மருத்துவம் பயின்ற வெண்பா கல்லூரி காலத்திலேயே பாரதி, ஹேமா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ள நினைத்தபோது, அவளுக்கு ஏற்பட்ட எதிர்பாராத விபத்தினால் பாரதி அதன்பின் கண்ணம்மாவை திருமணம் செய்து கொண்டான்.

இருப்பினும் ஒருவருட கால அவகாசத்தில் பாரதியைத் திருமணம் செய்து கொள்வேன் என்ற நம்பிக்கையில் வெண்பா தன்னுடைய அம்மாவிடம் சவால் விட்டு அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வந்தாள், ஆனால் இதுவரை வெண்பாவிற்கு திருமணம் ஆகாததால் கடுப்பான அமெரிக்காவில் இருந்து கிளம்பி வந்த வெண்பாவின் அம்மா நேராக பாரதியை சந்தித்து வெண்பாவை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறாள்.

இருப்பினும் அதற்கு அசராத பாரதி,வெண்பாவை அழைத்து பேசி புரிய வைத்த நினைத்தபோது எல்லை மீறி பேசிய வெண்பாவை பாரதி அடிக்க கை ஓங்குகிறான். இவ்வாறு பாரதியிடம் அசிங்கப்பட்டு வீடு திரும்பிய வெண்பாவிற்கு அவளுடைய அம்மா, வெண்பாவின் வில்லத்தனத்தை ஊத்தி மூட போகிற விஷயத்தை செய்ய காத்திருக்கிறாள்.

‘இவ்வளவு நாள் பாரதியை கல்யாணம் செய்ய முடியவில்லை என்றால், இனியும் உன்னால் முடியாது நான் சொல்ற மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டினால் உன்னுடைய வாழ்க்கை நன்றாக அமையும்’ என வெண்பாவை தந்திரமாக பாரதியிடம் இருந்து பிரிக்க வெண்பாவின் அம்மா முடிவெடுத்துவிட்டார். ஏற்கனவே ஜோசியக்காரர் ஒருவர் வெண்பாவிற்கு  திருமணம் சீக்கிரம் நடக்க போகிறது என்றும், அது வெண்பா விரும்புபவர் அல்ல.

வெண்பாவை விரும்பும் நபர் என சொல்லியிருக்கும் நிலையில், ஒருவேளை ஏற்கனவே வெண்பாவை பிடித்திருக்கிறது என அடிக்கடி மிரட்டும் துர்கா, தற்போது வெண்பாவின் கைவசம் இருப்பதால் அவன் தப்பித்து வெண்பாவின் அம்மாவை சந்தித்து பேசி, அவனே வெண்பாவை திருமணம் செய்ய வாய்ப்பிருக்கிறது. அப்படி இல்லை என்றால் அமெரிக்க மாப்பிள்ளை யாராவது புதிதாக என்ட்ரி கொடுக்கப் போகின்றனர். இவை இரண்டில் எது நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்