ரட்சிதா எக்ஸ் புருஷனுக்கு மரண பீதியை காட்டிய மாஸ்டர்.. பதறிப் போய் போட்ட ட்விட்டர் பதிவு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான சுவாரஸ்யத்தை காட்டி வருகிறது. அதில் பல சர்ச்சையான விஷயங்கள் இருந்தாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்த விஷயம் என்றால் அது ரட்சிதா மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஜோடியின் விவகாரம் தான்.

சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த ரட்சிதா மகாலட்சுமி அதைத்தொடர்ந்து ஏராளமான சீரியல்களில் நடித்திருக்கிறார். சீரியலில் நடிக்கும் போதே சக நடிகரான தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரட்சிதா அதன் பிறகு தொடர்ந்து நடித்து வந்தார்.

பல வருடங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த இந்த நட்சத்திர ஜோடி தற்போது கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்துள்ளனர். குழந்தை பெற்றுக் கொள்ளாமல் நடிப்பிலேயே ரட்சிதா கவனம் செலுத்தியதால்தான் இந்த பிரிவு என்று சில செய்திகள் வெளிவந்தது ஆனால் சம்பந்தப்பட்ட இருவரும் இது குறித்து எந்த நேரடியான விளக்கத்தையும் இதுவரை அளிக்கவில்லை.

Also Read: கிளாமர் ஹீரோயின்களுக்கே சவால் விடும் ரட்சிதா.. பிக்பாஸ் மேடையில் போட்ட கவர்ச்சி ஆட்டம்

அந்த சமயத்தில்தான் ரட்சிதா விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இது பெரும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிலையில் அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராபர்ட் மாஸ்டரின் செயல்பாடுகள் சில விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே அவர் ரட்சிதாவை வைத்த கண் வாங்காமல் பார்ப்பதும், காதலுடன் பேசுவது என்று பரபரப்பை கிளப்பி வருகிறார்.

ரட்சிதா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று தெரிந்தும் கூட ராபர்ட் மாஸ்டர் அவரிடம் இதுபோன்று நடந்து கொள்வது ரசிகர்களை வெறுப்படைய வைத்துள்ளது. மேலும் சோசியல் மீடியாவில் இவர்கள் இருவரை பற்றிய விவகாரமும் பூதாகரமாக வெடித்து வருகிறது. ராபர்ட் மாஸ்டர் இப்படி நடந்து கொண்டாலும் கூட ரட்சிதா தன்னுடைய நிதானத்தை இழக்காமல் தெளிவாகவே தன்னுடைய விளையாட்டை ஆடி வருகிறார்.

Also Read: கேர்ள் பிரண்டே இல்லையாம், ப்ரோ அதுல நீங்க ஒன்னாம் நம்பர்.. ரட்சிதாவை பார்த்து ஊத்திய ஜொள்ளால் மிதக்கும் பிக்பாஸ் வீடு

இதனால் ரசிகர்கள் அனைவரும் ரட்சிதாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் இந்த விஷயத்தை பற்றி தவறாகவும் பரப்பி வருகின்றனர். இதனால் தற்போது மனஸ்தாபத்தால் மட்டுமே பிரிந்து இருக்கும் ரட்சிதா, தினேஷ் இருவரும் நிரந்தரமாக பிரிந்து விடுவார்கள் என்ற ஒரு பதட்டமும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

அது ரட்சிதாவின் கணவருக்கும் இருக்கிறது. அதனாலேயே அவர் தற்போது ட்விட்டரில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் அவர் ஒரு பெண் எல்லோரிடமும் நட்பாக பழகினால் அவள் எல்லாவற்றிற்கும் சரி என்று கூறி விடுவாள் என்ற அர்த்தம் கிடையாது. நம்முடைய வாழ்க்கையை சுதந்திரமாக வாழ இது போன்ற முட்கள் இடையில் வரும். நாம் அதை தூக்கி எறிய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் மறைமுகமாக தன் மனைவியின் மீது இருக்கும் நம்பிக்கையை இதன் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனாலும் அவருடைய இந்த பதிவில் எங்கே இந்த பிரிவு நிரந்தரமாகி விடுமோ என்ற ஒரு மரண பீதி இருப்பதை நம்மால் மறுக்க இயலாது.

Also Read: விவாகரத்தை பற்றி வெளிப்படையாக பேசிய தினேஷ்.. சர்ச்சைகளுக்கு மறைமுகமாக பதிலளித்த ரட்சிதா

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்