நடிகை மீது பித்து பிடித்து அலைந்த புருஷன்.. காசை கொடுத்து சக்காளத்தியை விரட்டி விட்ட மனைவி

பாலில் ஊறவைத்த பன்னு மாதிரி கொழுக் மொழுக் என இருக்கும் அந்த நடிகையின் மீது பெரும்புள்ளி ஒருவருக்கு நீண்ட நாட்களாகவே ஒரு கண் இருந்து வந்தது. சரியான நேரம் பார்த்து அம்மணியை மடக்கிய அந்த பிரபலம் மனைவிக்கு தெரியாமல் தனியாக வீடு எடுத்து குடித்தனமே நடத்தி வந்திருக்கிறார்.

துண்டு துக்கடா கேரக்டரில் நடித்து வந்த நடிகையும் புளியங்கொம்பாக பிடித்த சந்தோஷத்தில் நடிப்பை கூட ஓரம் கட்டி அந்தப் பிரபலத்துடன் ஜாலி பண்ணி இருக்கிறார். இது ஒரு கட்டத்தில் அந்த பெரும்புள்ளியின் மனைவிக்கு தெரிய வந்திருக்கிறது.

Also read: கழுவுற மீனில் நழுவுற மீனாக இருந்த தொகுப்பாளினி.. அரசியல்வாதிக்கு தண்ணி காட்டிய சம்பவம்

உடனே மாரியாத்தா போல் ஆக்ரோஷமான அவர் இந்த வேலையெல்லாம் வச்சுக்க கூடாது என்று புருஷனை மிரட்டி இருக்கிறார். ஆனாலும் வாழ்ந்தால் மகாதேவி இல்லையேல் மரண தேவி என்று அவர் தனக்கு தெரிந்த பஞ்ச் டயலாக் எல்லாம் பேசியிருக்கிறார்.

இதனால் கடுப்பான அவருடைய மனைவி சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டக்காரன் காலில் விழுவதே மேல் என்று சக்காளத்தியை பார்க்க போயிருக்கிறார். ஆனால் அந்த நடிகையோ பிரபலத்தை விட்டுக் கொடுக்க முடியாது என்று முரண்டு பிடித்து இருக்கிறார்.

Also read: இன்னைக்கு நான் நாளைக்கு நீ.. நடிகையை பங்கு போட்டு அந்தரங்க டார்ச்சர் செய்த 2 ஹீரோக்கள்

உடனே ஹீரோயினின் மைண்ட் வாய்ஸை தெரிந்து கொண்ட மனைவியும் பணத்துக்காக தானே இந்த சீன் என்று கோடி கணக்கில் காசை கொடுத்து இருக்கிறார். ஆஹா ரெண்டு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாமே என்று பிளான் போட்ட நடிகையும் இப்போது அந்த பிரபலத்தை விட்டு விலகி விட்டாராம். இதுதான் இப்போது கோடம்பாக்க டீக்கடைகளில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்