Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மகாநடி படத்தால் முக்கிய முடிவு எடுத்த ஜெமினியின் மகள்..!

மகாநடி படத்தில் ஜெமினி கணேசனை தவறாக சித்தரித்த படக்குழுவிற்கு எதிராக ஜெமினி கணேசனின் மூத்த மனைவியின் மகள் முக்கிய முடிவை எடுத்து இருக்கிறார்.

சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு தெலுங்கில் மகாநடி என்ற பெயரிலும், தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும் வெளியாகி பெரும் வெற்றியை பெற்று இருக்கிறது. சாவித்ரியின் குழந்தை பருவம் முதல் அவரின் இறப்பு வரை படத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. இதற்கு பலரும் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். சாவித்ரியின் மகள் சாமூண்டீஸ்வரி என் அம்மாவை கீர்த்தி வடிவில் பார்த்தேன் என கூறி மெய் சிலிர்த்தார். ஆனால் ஜெமினி கணேசனின் முதல் மனைவி மகள்கள் இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இப்படத்தில் சாவித்ரியின் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வான ஜெமினி கணேசனுடனான காதலும் சொல்லப்பட்டு இருந்தது. ஆனால், ஜெமினி தான் சாவித்ரிக்கு மதுவை அறிமுகப்படுத்தியது போன்றும், ஜெமினியை எடுபுடி போலவும் இருந்த காட்சிக்கு அவரின் மகள் கமலா செல்வராஜ் கடும் எதிர்ப்பை பதிவு செய்து இருந்தார். சாவித்ரிக்கு அப்பா தான் மதுவை அறிமுகப்படுத்தினார் என்றால் என் அம்மாவும் மது ப்ரியராக ஆகி இருக்க மாட்டாரா, அவர் எந்த பெண்ணையும் ஏமாற்றவில்லை. விரும்பிய பெண்களை மட்டுமே திருமணம் செய்து கொண்டார் என ஜெமினியின் மூத்த மகள் கமலா செல்வராஜ் கடும் காட்டமாகவே பதில் அளித்திருந்தார். ஆனால், சாமூண்டீஸ்வரி என் அம்மா பார்வையில் தான் படத்தை பார்த்ததாகவும், ஜெமினி அப்பா பார்வையில் அக்கா படத்தை பார்த்ததாகவும் கூறி இருந்தார். மேலும் இதையெல்லாம் சர்ச்சையாக்கி அவரிடனான என் உறவை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்றார்.

இந்நிலையில், தன் அப்பாவினை தவறாக விமர்சித்து காட்சிப்படுத்தி இருந்த படக்குழுவிற்கு எதிராக ஒரு புது முடிவை அறிவித்து இருக்கிறார் கமலா செல்வராஜ். என் அப்பாவும் சாவித்ரி போல பல படங்களில் நடித்து சிறப்புற்றவர் தான். அதனால், அவரின் உண்மையான வாழ்க்கையை ஆவணப்படமாக எடுத்து உலகுக்கு புரிய வைக்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top