போலீஸ் படங்களை வெறுத்த ஹரி.. துரைசிங்கம், ஆறுச்சாமியை எல்லாம் வாடவிட்ட இயக்குனர்

The incident that changed director Hari’s formula: விக்ரமின் சாமி, சூர்யாவின் சிங்கம் சீரிஸ் போன்ற அதிரடியான போலீஸ் கதைக்களத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தவர் தான் கமர்ஷியல் இயக்குனர் ஹரி. இவர் இப்போது தன்னுடைய ஃபார்மட்டையே மாற்றி வேற ரூட்டில் படம் பண்ண முடிவெடுத்துள்ளார்.

துவக்கத்தில் ஹரி பல போலீஸ் படங்களை கொடுத்து அசத்தியவர். இவர் படங்களில் இருக்கும் போலீஸ் கதாபாத்திரங்களான சூர்யாவின் துரைசிங்கம், விக்ரமின் ஆறுச்சாமி கேரக்டரை பக்காவாக செதுக்கியவர். அந்த கேரக்டர் திரையில் தோன்றினாலே நமக்கே முறுக்கேறும் வகையில் இருக்கும். இந்த படங்கள் நிஜ போலீஸ்களுக்கு மிகப்பெரிய மரியாதையை கொடுத்தது மட்டுமின்றி அவர்களை எல்லாம் கெத்து காட்ட வைத்தது.

அதனால் சாமி, சிங்கம் சீரிஸ் போன்ற படங்களுக்கு பிறகு அடுத்த பாகம் உருவாகுவதற்கு முட்டுக்கட்டையாக ஒரு சம்பவம் அமைந்துள்ளது. இப்போது ஹரி சாத்தான்குளம் சம்பவத்தை பார்த்து தான் இனிமேல் போலீஸ் படங்களை எடுக்க கூடாது என முடிவெடுத்து இருக்கிறார்.

Also Read: ரசிகர்கள் மறந்ததால் விபரீத முடிவு.. கடைசி அஸ்திரத்தை கையில் எடுக்கும் ஜீவா

ஹரியின் ஃபார்முலாவை மாற்றிய சம்பவம்

தூத்துக்குடியில் பிறந்த ஹரிக்கு அவருடைய ஊரில் தந்தை- மகன் இருவரும் போலீசாரால் கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதனால் ஹரி இனிமேல் அதிரடியான கிராமத்து கதையம்சம் கொண்ட போலீஸ் படங்களை எடுக்க கூடாது என முடிவெடுத்து விட்டார்.

ஹரி இப்போது தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக விஷாலை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படம் இதுவரை ஹரி இயக்கிய படங்களை விட முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகிறது.

Also Read: சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த சம்பள இடத்தை பிடித்த அஜித்.. நஷ்டம்னு தெரிஞ்சே தலையை விட்ட முதலாளி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்