இளம் ஹீரோ மேல் இயக்குனருக்கு வந்த ஆசை.. மானத்தை காப்பாற்றிக் கொள்ள தெறித்து ஓடிய நடிகர்

திரையுலகில் மிகப்பெரிய அந்தஸ்துடனும், மரியாதையுடனும் வலம் வருபவர் தான் அந்த இயக்குனர். அது தவிர தயாரிப்பாளர், நடிகர் போன்ற பல முகங்கள் அவருக்கு இருக்கிறது. அதனாலேயே அவர் கொஞ்சம் செல்வாக்கான மனிதராக பார்க்கப்படுகிறார். அப்படிப்பட்ட அவர் இளம் ஹீரோ ஒருவருடன் இரவை கழிக்க விரும்பிய சங்கதி அதிர்ச்சியை வரவழைத்துள்ளது.

முன்னணி நடிகராக இருக்கும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் இளம் பெண்களுக்கு இவர் தான் கனவு நாயகனாகவும் இருக்கிறார். மேலும் குறுகிய காலத்திலேயே புகழின் உச்சத்திற்கு சென்ற அந்த நடிகர் இப்போது அனைத்து மொழிகளிலும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Also read: புருஷனைப் போல் 2வது காதலரையும் தூக்கி கடாசிய நடிகை.. அம்மணிக்கு என்ன ஒரு தொழில் பக்தி

அப்படித்தான் அந்த இயக்குனர் தயாரித்த பிரம்மாண்ட திரைப்படத்திலும் இவர் நடிக்க சம்மதித்தார். இதன் மூலம் அவர் உலக அளவில் பிரபலம் ஆகிவிடலாம் என்று திட்டம் போட்டிருந்தார். ஆனால் படப்பிடிப்பு நடக்கும் சமயங்களில் இந்த இயக்குனரின் நடவடிக்கை அவருக்கு பயத்தையே கொடுத்திருக்கிறது.

ஏனென்றால் அந்த இயக்குனருக்கு நடிகரின் மேல் ஒரு கேவலமான ஆசை வந்திருக்கிறது. பொதுவாக படங்களில் நடிக்கும் ஹீரோயின்களை தான் சில பிரபலங்கள் தங்கள் ஆசைக்கு இணங்க சொல்வார்கள். ஆனால் இந்த இயக்குனரோ ஹீரோவின் மீது கண் வைத்திருக்கிறார். இயக்குனரின் இந்த கள்ளப் பார்வையை தெரிந்து கொண்ட ஹீரோ கொஞ்சம் பதட்டத்துடனே தான் அந்த படத்தில் நடித்திருக்கிறார்.

கடைசியில் அவர் எதிர்பார்த்தது போலவே அந்த இயக்குனர் ஹீரோவிடம் தன்னுடைய கேவலமான ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனால் அரண்டு போன அந்த நடிகர் முடியவே முடியாது என்று மறுத்திருக்கிறார். அவரின் நல்ல நேரமோ என்னவோ இயக்குனர் அதன் பிறகு நடிகரை கட்டாயப்படுத்தவில்லையாம். இப்படியாக அந்த ஹீரோ படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி வந்திருக்கிறார்.

Also read: ஐயோ அந்தப் பழம் புளிச்சிடுச்சு.. ஜோடி போட்ட ஹீரோயினை ரிஜெக்ட் செய்த நடிகர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்