மாயோன் வெற்றியைத் தொடர்ந்து சிபி எடுத்த அதிரடி முடிவு.. காசு மழை கொட்டப் போகுது

5000 ஆண்டுகளுக்குமேல் பழமையான கோயிலில் இருக்கும் தங்கம், வைர நகைகள் அடங்கிய புதையலைத் தேடி செல்லும் போது ஏற்படும் அமானுஷ்ய அனுபவத்தை பற்றிய கதைதான் மாயோன் திரைப்படம். இந்தப் படம் ஜூன் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகி தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

டபுள் மீனிங் புரோடக்சன் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்து, கிஷோர் இயக்கிய இந்தப் படத்தில் சிபிராஜ், தான்யா ரவிச்சந்திரன், கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.

இதனால் படத்திற்கு கிடைத்த வெற்றியால் சந்தோசமடைந்த சிபிராஜ் படத்தின் இயக்குனர் கிஷோருக்கு தங்க சங்கிலியைப் பரிசாக அளித்து மகிழ்ந்தார். தமிழ் சினிமாவின் சத்யராஜின் மகனாக அறிமுகமானாலும் சிபிராஜ் தனக்கென இடத்தை பிடிப்பதற்காக தற்போது வரை படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்.

இருப்பினும் முயற்சியைக் கைவிடாத சிபிராஜ் நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். மாயோன் திரைப்படத்தில் பழமையான கோயிலில் புதையல் இருப்பதாக தொல்லியல் துறைக்கு தகவல் கிடைக்க அதை கண்டுபிடிக்க விரையும் தலைமை அதிகாரியாக இந்தப்படத்தில் சிபிராஜ் நடித்திருக்கிறார்.

அந்த வகையில் புதையல் வேட்டை தொடர்பாக எடுக்கப்பட்ட மாயோன் படத்திற்கு கிடைத்த வரவேற்பால் விரைவில் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழு முடிவெடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பை தற்போது தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

மேலும் அமானுஷ்யங்கள் நிறைந்த திரில்லர் படமான மாயோன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் கிஷோரே இயக்குகிறார். விரைவில் அதற்கான படப்பிடிப்பு துவங்கப்பட்டு அடுத்த வருடம் 2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்