அப்பாவுக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்யப் போன நடிகை.. இறுதிச் சடங்குக்கு காசு இல்லாமல் தவித்த சோகம்

சினிமாவை பொருத்தவரையில் அட்ஜஸ்மென்ட் பிரச்சனை தலை தூக்கி உள்ளதாக பல பிரபலங்கள் பேட்டி கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் ஒரு நடிகை தானும் அந்த பிரச்சனையை சந்திக்க நேரிட்டதாக கூறி உள்ளார். சில சின்ன கம்பெனிகளில் இது போன்ற அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை உள்ளதாக அவர் கூறியிருந்தார்.

இந்த நடிகை வெள்ளித்திரைகள் சில படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் தன்னுடைய வயதில் குறைந்த நபர்கள் கூட தன்னை அட்ஜஸ்ட் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தார்.

ஆனால் அப்போது அந்த படமே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்ட வெளியேறியதாக கூறினார். இந்நிலையில் நடிகையின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக இறந்து விட்டாராம். அவரின் இறுதிச்சடங்கு செய்வதற்கு கூட அப்போது என்னிடம் பணம் இல்லை.

வேற வழி இல்லாமல் அட்ஜஸ்ட்மெண்ட் செய்துதான் தனது தந்தையின் இறுதிச் சடங்கை நடத்த வேண்டும் நிலை எனக்கு ஏற்பட்டது. ஆனால் அந்தச் சமயத்தில் தெய்வம் என்னை கைவிடவில்லை. அப்போது ஒரு தயாரிப்பாளர் வந்து தனக்கு பணம் கொடுத்த உதவினார்.

அதன் பின்பு படங்களில் நடித்து அந்த கடனை நான் அடைத்து விட்டேன் என்று நடிகை பேட்டியில் கூறியுள்ளார். ஆகையால் நமக்கு மிகப்பெரிய கஷ்டம் வந்தாலும் அப்போது தவறான பாதையை தேர்ந்தெடுக்க கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

ஏனென்றால் எப்போதுமே நேர்மையாக இருந்தால் ஏதாவது ஒரு ரூபத்தில் கண்டிப்பாக நமக்கு நல்லது நடக்கும் என்று தனது சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வை கூறியுள்ளார். அந்த நடிகை கொடுத்த பேட்டி இப்போது இணையத்தில் அதிக நபரால் பார்க்கப்பட்டு வருகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →