வாய்ப்புக்காக இயக்குனரை மடக்கி போட்ட நடிகை.. கர்ப்பமானதால் நடந்த சக்களத்தி சண்டை

வெளியில் டீசன்டாக வலம் வரும் நடிகையின் திரை மறைவு கதையை கேட்டால் தலையில் அடித்துக் கொள்ளலாம் என தோணும். முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் திரையுலகையே ஆட்டிப்படைத்த அந்த நடிகை இப்போதும் கூட தன் நடிப்பால் மிரட்டிக் கொண்டுதான் இருக்கிறார். ஆரம்பத்தில் வாய்ப்புகளுக்காக கஷ்டப்பட்டு கொண்டு இருந்த இந்த நடிகை டாப் இயக்குனர் ஒருவரை தன் கண்ட்ரோலில் வைத்திருந்தார்.

அதன் விளைவாகவே முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இப்படி வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கும் நேரத்தில் இயக்குனருடன் இருக்கும் உறவும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அதன் விளைவாக இந்த நடிகை கர்ப்பமாகி இருக்கிறார். இதை எதிர்பார்க்காத நடிகை இதை வைத்து இயக்குனரை கார்னர் செய்யவும் ஆரம்பித்திருக்கிறார்.

Also read: முதலாளியுடன் அந்தரங்க உறவில் இருந்த கேரளத்து அம்மணி.. நைசா பின்வாசல் வழியாக வந்து சென்ற இயக்குனர்

அதாவது ஏற்கனவே திருமணம் ஆகி பிள்ளை குட்டிகளுடன் இருக்கும் அவரை தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நச்சரிக்க ஆரம்பித்தாராம். தேவைக்காக மட்டுமே அவரை பயன்படுத்திக் கொண்ட அந்த இயக்குனர் இந்த சூழ்நிலையை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடி போயிருக்கிறார். இது ஒரு புறம் இருக்க இந்த விவகாரம் இயக்குனரின் மனைவியுடைய காதுக்கு சென்று இருக்கிறது.

உடனே பத்ரகாளியாக மாறிய அந்த மனைவி கணவரை ஒன்றும் கேட்காமல் நேரடியாக நடிகையை சந்திக்க சென்றிருக்கிறார். இதை ஓரளவுக்கு எதிர்பார்த்த நடிகை அதை சமாளிக்க தயாராகவே இருந்திருக்கிறார். ஆனால் ஆக்ரோஷத்தின் உச்சத்தில் இருந்த மனைவி நடிகையை கண்டபடி திட்டி தீர்த்து விட்டாராம்.

Also read: இளம் சிட்டால் நடிகைக்கு ஏற்பட்ட அவமானம்.. காதலன் பேச்சைக் கேட்டு பேக்கப் சொன்ன ஹீரோயின்

ஆனால் நடிகையோ இயக்குனரை விடமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க ஒரு கட்டத்தில் இருவருக்கும் சக்களத்தி சண்டையே நடந்திருக்கிறது. அதன் பிறகு இயக்குனரை விட்டு விலக முடிவு செய்த நடிகை தன் வயிற்றில் இருந்த கருவையும் கலைத்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தினார். தற்போது அவர் வேறு ஒரு இயக்குனரை திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டி என வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்