நம்பர் ஒன் சம்பளம் வாங்கியும் சைக்கோவாக மாறிய நடிகை.. சர்ச்சைக்கு ஆளான சம்பவம்

Actress Kangana Ranaut: தன்னிடம் இருக்கும் நடிப்புத்திறனை வெளிக்காட்ட சினிமாவிற்கு வரும் மாடலாக இருந்தாலும் சரி ஹீரோயினாக இருந்தாலும் சரி அவர்கள் எதிர்கொள்ளும் சர்ச்சைகள் ஏராளம். அவ்வாறு நம்பர் ஒன் சம்பளம் வாங்கியும் சர்ச்சையால் சைக்கோ லெவலுக்கு மாறிய நடிகையை பற்றிய தகவல் பரபரப்பை உண்டு படுத்தி வருகிறது.

சிறந்த மாடலாகவும், ஹிந்தியில் முன்னணி கதாநாயகி ஆகவும் வலம் வருபவர் தான் கங்கனா ரனோட். தமிழில் இவர் நடித்த தாம் தூம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருப்பார். அதன் பின் ஜெயலலிதாவின் வரலாற்றை கூறும் உன்னத படமான தலைவியிலும் சிறப்புற நடித்திருப்பார்.

ஹிந்தியில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் கங்கனா ரனோட். மேலும் தனிப்பட்ட முறையில் இவர் அரசியலிலும்  நாட்டம் கொண்டவராகவும் இருக்கும் இவர் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைத்து வருகிறது. அதை எதிர்த்து இணையதளத்தில் பதிலடி கொடுத்தும் பல சர்ச்சைக்கு உள்ளானார்.

சமீபத்தில் தன்னை வேவு பார்க்கும் சில கும்பல் தன் வீட்டில் ஜூம் லைட் பொருத்தியதாக எழுந்த பேச்சில் மிகுந்த கோபத்திற்கு ஆளானார். அதைத்தொடர்ந்து இவர் செய்து வரும் செயல்களை கொண்டு இவர் மனநோயாளி என்றும் வதந்திகள் வெளிவர தொடங்கியது.

மேலும் தன்னை அவதூறாக பேசி வருபவர்களை இணையதளத்தில் வன்மையாக சாடியுள்ளார். நீங்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் என் மீது எந்த குற்றச்சாட்டையும் யாரும் கொடுக்கவில்லை, என்னை யாரும் பின்தொடரவும் இல்லை இதுபோன்ற வதந்திகளை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

இல்லையென்றால் கூறுபவர்களை வீடு புகுந்து அடிப்பேன் எனவும் சைக்கோ மாதிரி பேசி வருகிறார். மேலும் தன்னை மன நோயாளி என கூறுபவர்களை எதிர்க்க நான்  எந்த அளவிற்கு வேண்டுமானாலும் செல்வேன் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார். இது போன்ற செய்தி தான் தற்பொழுது இணையதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →