காதலனுக்காக பல பேரை அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகை.. போலியான ஆண்களால் திருமணத்தை வெறுத்த சோகம்

தற்போது புகழின் உச்சியில் இருக்கும் நடிகை ஒருவர் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே இருக்கிறார். பலரும் இது குறித்து அவரிடம் கேட்டால் சிரிப்பு ஒன்றை தான் பதிலாக தருவார். ஆனால் அந்த சிரிப்புக்கு பின் எவ்வளவு வலியும், வேதனையும் இருக்கிறது என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

அதிலும் நடிகை தன்னுடைய காதல் தோல்வியால் தான் தனி மரமாக நிற்கிறார் என்ற விஷயமும் பெரிய அளவில் யாருக்கும் தெரியாது. அதாவது நடிகை நடிக்க வந்த புதிதில் உதவி இயக்குனர் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்திருக்கிறார். சில காலங்களுக்குப் பிறகு திருமணம் செய்து கொள்ள விரும்பிய நடிகையிடம் அந்த காதலர் நான் ஒரு படத்தை இயக்கிய பிறகு கல்யாணம் பண்ணலாம் என்று கூறி இருக்கிறார்.

Also read: நடிகையுடன் காட்டிய நெருக்கம், சொர்ணாக்காவாக மாறிய நடிகரின் பொண்டாட்டி.. போட்டிக்கு வந்த மல்லு சேச்சி

மேலும் தயாரிப்பாளரிடம் நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து போனால் எனக்கு வாய்ப்பு கிடைத்துவிடும் என்றும் சொல்லி இருக்கிறார். காதலனுக்காக பிடிக்கவில்லை என்றாலும் இந்த விஷயத்திற்கு அவர் சம்மதித்திருக்கிறார். இப்படியே அந்த காதலர் நடிகையை பல ஆண்களிடம் வாய்ப்பு என்ற பெயரில் அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால் நடிகை எதிர்பார்த்தது போல் அந்த உதவி இயக்குனர் எந்த படத்தையும் இயக்காமலேயே பொழுதை ஓட்டி இருக்கிறார்.

பிறகுதான் நடிகைக்கு உண்மை தெரிய வந்திருக்கிறது. அதாவது அந்த நடிகையை வைத்து காதலர் ஏராளமான பணத்தை சம்பாதித்து இருக்கிறார். இப்படி நம்பி மோசம் போய்விட்டோமே என்று நொந்து போன நடிகை தன் காதலரை அடித்து உதைத்து துரத்தி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் ஆண் வர்க்கத்தின் மேலேயே அவருக்கு ஒரு தீராத வெறுப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இப்படிப்பட்ட போலியான ஆண்களை நம்பி வாழக்கூடாது என்று முடிவெடுத்த நடிகை திருமணமே வேண்டாம் என்று இருக்கிறார். தற்போது முதிர் கன்னியாக இருக்கும் இந்த நடிகை சினிமா தான் தன் உலகம் என்று நடித்து வருகிறார். திரைக்கு முன்னால் அனைவரையும் ரசிக்க வைத்த இந்த நடிகைக்குள் இப்படி ஒரு சோகம் இருப்பது பலரையும் வேதனை அடைய வைத்துள்ளது.

Also read: அக்கடதேசத்தில் பரிகாரம் தேட சென்ற காதல் ஜோடி.. கையேந்தி நிற்கும் நம்பர் நடிகை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்