தாராள கவர்ச்சி காட்டிய நடிகை.. மார்க்கெட் போகும் பரிதாபம்

சினிமாவில் இப்போது புதுவரவாக வரும் நடிகைகள் சில யுத்தியை கையாண்டு வருகிறார்கள். அதாவது படத்தில் ஓவர் கிளாமராக நடித்தால் அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்துவிடும் என்று நம்புகின்றனர். நடிகை ஒருவர் வந்த புதிதில் முதல் படத்திலேயே படுக்கை அறை காட்சியில் நடித்திருந்தார்.

ஆனால் சில காரணங்களினால் அந்த படம் ரிலீசாக முடியாமல் போனது. அதன் பிறகு நடிகை ஹோம்லி கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இதனால் நடிகை தமிழ் சினிமாவில் பெயரும் கிடைத்திருந்தது.

ஆகையால் அதிகம் கிளாமர் காட்டாமல் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்தார். முதல் படம் ரிலீஸ் ஆகாமலே இருக்கும் என்று நினைத்த நடிகைக்கு பேர் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது தயாரிப்பாளர் அந்த படத்தை ரிலீஸ் செய்து விட்டார்.

Also Read : என் கூட 6 மாசம் மட்டும் இரு, அடுத்த லெவலுக்கு கூட்டிட்டு போறேன்.. சீரியல் நடிகையிடம் தவறாக பேசிய இயக்குனர்

இதனால் ரசிகர்களிடம் நடிகைக்கு இருந்த நல்ல பெயர் மொத்தமாக டேமேஜ் ஆனது. இவ்வளவு மோசமாக நடித்திருக்கிறார் என்று அவரை வெறுக்க ஆரம்பித்து விட்டனர். நடிகை அதன்பிறகு நன்றாக நடித்த படங்களும் ரசிகர்களால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. ஆகையால் நடிகையின் படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.

எனவே இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நடிகைக்கு வாய்ப்பு தர மறுத்து வருகிறார்கள். ஆகையால் நடிகை என்ன செய்வது என்று தெரியாமல் இப்போது இக்கட்டான சூழ்நிலையை இருக்கிறாராம். முதல் படம் மட்டும் ரிலீஸ் ஆகாமல் இருந்தால் நடிகையின் மார்க்கெட் இப்போது உச்சத்தில் இருந்திருக்கும்.

Also Read : பிரேக்கப் ஆன பிறகு டாப் ஹீரோக்களின் பட வாய்ப்புகளை இழந்த நடிகை.. ஆசைக்கு அடிபணியாததால் நடந்த திடீர் திருமணம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்