திருமணத்திற்காக அல்லாடும் தமிழும் சரஸ்வதியும்.. சுவாரசியமான இந்த வார எபிசோட்

விஜய் டிவியில் தீபக் மற்றும் நட்சத்திரா நாகேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சீரியல் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியல் ஆரம்பித்து சில மாதங்களே ஆனாலும் சுவாரஸ்யமான காட்சிகளால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்த சீரியலில் ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்த தமிழ் மற்றும் சரஸ்வதியின் திருமணப் பேச்சுவார்த்தை வரும் வாரம் நடக்க இருக்கிறது. சரஸ்வதியை பெண் பார்க்க தமிழின் குடும்பத்தினர் அவரது வீட்டுக்கு செல்கிறார்கள்.

ஆனால் தமிழின் மீதும் தமிழின் அம்மாவான கோதையின் மீதும் வெறுப்பில் இருக்கும் கோதையின் சம்மந்தி சந்திரகலா இந்த திருமணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த பல வழிகளில் யோசிக்கிறார். இறுதியாக தமிழுக்கு பெண் பார்க்கும் நிகழ்வில் சந்திரகலாவும் கலந்து கொள்கிறார்.

அப்போது சரஸ்வதியின் அப்பாவிடம் உங்க பொண்ணுக்கு எவ்வளவு நகை போடுவீர்கள், உங்களால் எவ்வளவு முடியும் என்று கிண்டலாக கேட்டு அவரை சங்கடப்படுத்துகிறார். இதன் மூலம் ஒரு பிரச்சனையை ஏற்படுத்தி திருமணத்தை நிறுத்த வேண்டும் என்பது அவரின் திட்டம்.

இது ஒரு புறமிருக்க, மற்றொரு புறம் தமிழும் சரஸ்வதியும் தாங்கள் மறைத்த உண்மையை கோதையிடம் சொல்ல முயற்சிக்கிறார்கள். அதாவது கோதை தன் மகன் தமிழுக்கு நல்ல படித்த பெண்ணாக அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால் சரஸ்வதியோ வெறும் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்திருக்கிறார்.

இதை அறியாத கோதை சரஸ்வதி எம்பிஏ படித்திருப்பதாக தவறாக எண்ணி இந்த திருமணத்திற்கு சம்மதிக்கிறார். எப்படியாவது அவரிடம் உண்மையை எடுத்துக் கூறி தங்கள் காதலை பற்றி புரிய வைக்க வேண்டும் என்று தமிழும் சரஸ்வதியும் முயற்சி செய்கின்றனர்.

இந்த உண்மையை அறிந்த கோதையின் நிலை என்னவாகும், சரஸ்வதி தனக்கு மருமகளாக வர அவர் சம்மதிப்பாரா, சந்திரலேகாவின் திட்டம் பலிக்குமா, தமிழ்-சரஸ்வதியின் காதல் கைகூடுமா, இது போன்ற பல சுவாரசியமான அதிரடி காட்சிகள் வரும் வாரம் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வர உள்ளது. இந்த காட்சிகளை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்