தாமரை பற்றிய பிரியங்காவின் கணிப்பு சரியா.. அதிக கோபத்தால் தடுமாறும் தாமரை

மேடை நாடக கலைஞராக இருந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருப்பவர் தாமரைச்செல்வி. இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நாள் முதல் ஒரு குழப்பத்துடன் இருந்து வருகிறார். நிகழ்ச்சி பற்றியும், விளையாட்டு பற்றியும் சரியான புரிதல் அவருக்கு இல்லை.

இதனால் பிக்பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்களுடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். பிக்பாஸ் நேற்றைய எபிசோடில் கூட பிரியங்காவுக்கு எதிராக மிகவும் ஆக்ரோஷமாக பதிலளித்தார். அவரின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதம் ஆகி வருகிறது.

அதாவது பிரியங்கா, தாமரைச்செல்வி குழப்பத்தில் இருப்பதால் அவருக்கு இந்த வாரம் கேப்டன் ஆகும் தகுதி இல்லை என்று கூறினார். பிரியங்கா ஏன் இப்படி சொன்னார் என்று கேட்க விரும்பாத தாமரை அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த விஷயத்தைப் பற்றி ரம்யா கிருஷ்ணன் நேற்று கேட்டபொழுது பிரியங்கா தன்னுடைய கருத்தை தெளிவாக கூறினார்.

ஆனால் தாமரையோ எனக்கு வாய்ப்பு கொடுத்தால் தான் என்னை நிரூபிக்க முடியும் என்று கூறினார். இதற்கு முன்பு பிரியங்கா கேப்டனாக இருந்தபோது வீட்டில் இருக்கும் அனைவரையும் ஒரு நாள் தலைவராக நியமித்தார். அப்பொழுது தாமரையும் ஒரு நாள் தலைவராக இருந்துள்ளார்.

இதை வைத்துதான் பிரியங்கா, தாமரை வீட்டின் தலைவர் ஆவதற்கு இப்போது தகுதி இல்லை என்று கூறினார் ஆனால் அதை பற்றி புரிந்து கொள்ளாத தாமரை தகுதி என்ற ஒரு வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு சண்டை பிடிக்க ஆரம்பித்து விட்டார்.

விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாத ஒருவர் தான் சிறந்த தலைவராக இருக்க முடியும். தாமரை தன்னைப் பற்றி யார் ஒரு வார்த்தை கூறினாலும் என்னை எப்படி நீங்கள் சொல்லலாம் என்று உடனே சண்டைக்கு சென்று விடுகிறார். இப்படி இருக்கும் ஒருவர் எப்படி தலைமை பொறுப்பை திறம்பட செய்ய முடியும்.

அதேபோல நேற்று சஞ்சீவ், தாமரைக்கு சி என்ற பேட்ஜை கொடுத்தார். அதை ஏற்றுக்கொள்ள முடியாத தாமரை உடனே எனக்கு நீங்கள் எப்படி இதைக் கொடுக்கலாம் என்று கேட்டார். தாமரையின் புரிதல் இவ்வளவு தான் என்பதற்கு இந்த ஒரு சம்பவமே எடுத்துக்காட்டாக இருந்தது. தன்னைப் பற்றி யாரும் ஒரு வார்த்தை சொல்ல கூடாது என்று சொல்லும் தாமரை அதை மற்றவர்களிடம் பின்பற்றுகிறாரா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இதை வைத்து பார்க்கும் பொழுது தாமரை பொய்யாக நடிக்கிறார் என்னும் பிரியங்காவின் கணிப்பு சரியானது தான். எப்பவோ நடந்த ஒரு விஷயத்தை மறக்க முடியாமல் இன்னும் அதையே கிளறி கொண்டிருக்கும் தாமரையின் இந்த செயல்பாடுகள் இப்பொழுது மக்களிடையே ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது.

தான் மட்டும் பேசாமல் மற்றவர்கள் பேசுவதையும் காது கொடுத்து கேட்டால் மட்டுமே வீண் விவாதங்கள் முடிவுக்கு வரும். இதை புரிந்து கொண்டால் தாமரை நிச்சயம் இறுதிப்போட்டிக்கு செல்லவும் வாய்ப்புண்டு.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்