சுயநலமாக தாமரையை உசுப்பேற்றி விடும் அக்ஷரா.. பத்த வச்சுட்டியே பரட்டை

பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது அனுதினமும் விறுவிறுப்புடனும் காரசாரமான ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் இந்த வாரத்திற்கான லட்சுரி பட்ஜெட்டிற்கான டாஸ்க் திங்கட்கிழமையிலிருந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.

அப்போது பிரியங்கா மற்றும் தாமரை இருவருக்குமே காரசாரமான விவாதம் நடைபெற்றது. அதன் பிறகு பிரியங்கா மற்றும் தாமரை இருவரும் ஒருவருடன் ஒருவர் முகம் கொடுத்து பேசுவதை தவிர்த்து கொண்டிருந்தனர்.

ஆனால் பிரியங்கா மற்றும் சாப்பிடும்போது தாமரை சமைத்த பிரியாணி நன்றாக இருந்ததால் தாமரையின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டார். இதனால் தாமரை மற்றும் அக்ஷரா இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் நக்கலாக சிரித்துக் கொண்டனர்.

ஏனென்றால் கோபமாக இருக்கும் ஒருவருக்கு எப்படி முத்தம் கொடுக்க முடியும் என்ற கேள்வி அக்ஷரா தாமரை மட்டுமல்ல ரசிகர்களுக்கு எழுந்தது. ஆனால் அந்த பிரச்சனை நேற்று முன்தினமே முடிந்து விட்டது. அப்படியும் அக்ஷரா அதனை மீண்டும் நேற்று இரவு தாமரையிடம் மீண்டும் பேசி உசுப்பேற்றி விட்டார்.

பொதுவாக அக்ஷரா இப்படிப்பட்ட கேரக்டர் இல்லை என்பதை புரிந்து ரசிகர்கள் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்று குழப்பம் அடைந்தனர். ஒருவேளை பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிப்பதற்காக பற்ற வைக்கும் வேலையை அக்ஷரா பக்காவாக பார்க்க துவங்கியுள்ளார்.

அதற்கு தாமரையை பயன்படுத்தி பிரியங்காவை பற்றி புறம் பேசுவதை அக்ஷரா கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். அக்ஷராவை சமூகவலைதளங்களில் பிக்பாஸ் ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றிக் கொண்டிருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்