தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவான ஆடுகளம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டாப்சி. அதன் பிறகு அஜித்துடன் ஆரம்பம், ராகவா லாரன்ஸின் காஞ்சனா-2 போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
தமிழிலிருந்து அப்படியே தெலுங்கிற்கு சென்ற டாப்ஸி அங்கேயே செட்டிலாகிவிட்டார். தொடர்ந்து அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா பட வாய்ப்புகள் குவிய ஒரு ஹிந்தி பட வாய்ப்பு இடையில் நுழைந்தது.
அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். முக்கியமாக டாப்ஸி நடிக்கும் அனைத்து படங்களும் பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது.
அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கைவசம் பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் டாப்ஸி சமீபத்தில் தன்னுடைய காதலருடன் மாலத்தீவிற்கு சென்று கூத்தடித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.
சமீபகாலமாக நடிகைகள் பலரும் வெளிநாட்டு நபர்களை காதலிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் டாப்சியின் காதலரும் ஒரு வெளிநாட்டவர் தான்.
திருமணம் எப்போது என்று கேட்டால் இப்போதைக்கு டேட்டிங் மட்டும் தான் எனவும், திருமணம் செய்யும் நேரம் வந்தால் கண்டிப்பாக தெரிவிப்பேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.