Tamil Cinema News | சினிமா செய்திகள்
தமிழ் படம் 2.O டீசரில் மாற்றம் செய்த படக்குழு… என்ன காரணம் தெரியுமா?

மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகி இருக்கும் தமிழ் படம் 2.ஓ டீசரில் படக்குழு ஒரு மாற்றத்தை செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சமகால தமிழ்த் திரைப்படங்களை பாகுபாடு பார்க்காமல் கிண்டல் செய்து வெளியானது தமிழ் படம். இப்படத்தில் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்திருந்தார். சி. எஸ். அமுதன் படத்தை இயக்கியிருந்தார்.
திஷா பாண்டே கதாநாயகியாக நடித்திருந்தார். வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோபாலா, எம். எஸ். பாஸ்கர், சண்முகசுந்தரம், பரவை முனியம்மா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். படத்தின் இண்ட்ரோ பாடல் முதல் கிளைமேக்ஸ் வரை இயக்குனர் பல படங்களை கலாய்த்து இருந்தார். இதனால் இப்படத்திற்கு வரவேற்பு அதிகமாகவே இருந்தது. பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் சக்கை போடு போட்டது.
இதை தொடர்ந்து, கோலிவுட்டின் லேட்டஸ்ட் ட்ரெண்ட்டில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. முதல் பாகத்தை போல சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவாவே நடித்திருக்கிறார். முதல்முறையாக இப்படத்தில் சதீஷ் வில்லனாக நடித்து இருக்கிறார். இப்படத்திலும் சமீபத்திய எல்லா படங்களையும் மனசாட்சியே இல்லாமல் படக்குழு கலாய்க்க இருப்பது டீசரிலேயே தெரிந்து விட்டது. ஒரே டீசரில் சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட் அடித்த எல்லா படங்கள் முதல் கண்டெண்ட் வரை வாரி இருந்தனர்.
இந்நிலையில், இந்த டீசர் நேற்று முதல் தியேட்டர்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் விஷால் நடிப்பில் வெளியான ‘துப்பறிவாளன்’ படத்தில் இடம்பெற்ற பழைய காட்சிக்குப் பதிலாக, அதே படத்தில் இடம்பெற்ற வேறு ஒரு காட்சியை படக்குழு இணைத்துள்ளனர். இதற்கு அக்காட்சியில் இருந்து புகைப்பிடித்தல் ஒரு காரணமாக இருக்கலாம் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
