Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
சினிமா வாய்ப்புக்காக புருஷனையே மறைத்து வைத்து சிங்கிள் என சொல்லி திரியும் நாயகி.. குழந்தை வேற இருக்குதாம்
சினிமா வாய்ப்புக்காக எதை எதையோ மறைப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் .ஆனால் முதல்முறையாக சினிமாவுக்காக தனக்கு திருமணமானதையே மறைத்து மேலும் குழந்தை இருப்பதையும் கூறாமல் சிங்கிள் என நாக்கு கூசாமல் பொய் பேசி வருகிறாராம் அந்த நாயகி.
ஏற்கனவே பிரியமான நாயகி சின்னத்திரையில் இருந்து வந்து சினிமாவை கலக்கிக் கொண்டிருக்கிறார். அவரது வழியில் தற்போது மீண்டும் ஒரு சின்னத்திரை நாயகி ஒருவர் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தன்னுடைய முத்திரையை பதித்து விட்டார் அந்த நாயகி.
பார்ப்பதற்கு சமத்தாக இருந்தாலும் பண்றதெல்லாம் படுபயங்கர வேலைகளாம். இவ்வளவு நாட்களாக அனைவரும் அந்த நாயகியை சிங்கிள் என நினைத்துக் கொண்டிருந்தார்களாம். ஆனால் அந்த நாயகிக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரும் உள்ளார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்களாம் நம் இளம் நாயகர்கள்.
சமீபத்தில் வெளிவந்த கடவுள் படம் இந்த நாயகிக்கு தமிழ் சினிமாவில் நல்லதொரு பெயரை எடுத்துக் கொடுத்தது. அதனால் அடுத்தடுத்து படங்களில் கமிட்டானார். சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது என்பதற்காக தனது புருஷனை மறைத்து சொந்த ஊரில் வைத்துள்ளாராம் அந்த நாயகி.
இந்த லட்சணத்தில் தன்னை படுக்கைக்கு அழைத்தார்கள் என்று வேற சமீபத்தில் பேட்டி கொடுத்தாராம். அதனைப் பார்த்த தயாரிப்பாளர்களை, ஐயோ நல்ல பொண்ணா இப்படி செய்து விட்டோமோ என யோசித்தார்களாம்.
அவர்களுக்கே அப்புறம்தான் விஷயம் தெரிந்தது. அம்மணி ஏற்கனவே ஏகப்பட்ட தில்லுமுல்லுகளை செய்து வருகிறார் என. தற்போது அதையே காரணம் காட்டி அம்மணியை மயக்க திட்டம் போட்டு விட்டார்களாம் சிலர்.
தங்களுடன் வரவில்லை என்றால் உனக்கு திருமணமானதை வெளியே கூறிவிடுவேன் என அம்மணியை மிரட்டுகிறார்களாம். பார்ப்பதற்கு பச்சைப் பிள்ளை போல் இருந்தாலும் பலான வேலைகளில் அம்மணி மிகத்தெளிவாக இருக்கிறாராம்.
சினிமா மோகம் யாரை விட்டது!
