கமலுக்கு ஒரு நியாயம் சூர்யாவுக்கு ஒரு நியாயமா.. ஓரவஞ்சனை செய்த திரையுலகம்

பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து நம்மை மிரட்டிய கமல்ஹாசன் விஸ்வரூபம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தீவிரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து இருந்தார். அவரின் ரசிகர்களை மிகவும் கவர்ந்த திரைப்படம் இது.

அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் அவ்வளவு சீக்கிரம் வெளியாகவில்லை. ஏனென்றால் இந்த படத்தில் முஸ்லிம்களை தவறாக சித்தரிப்பதாக கமலுக்கு எதிராக பல எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும் முஸ்லிம் சமூகத்தினர் இந்த படத்தை வெளியிடுவதற்கு தடை செய்து போராட்டங்களை நடத்தினர்.

இவ்வாறு கிளம்பிய பல எதிர்ப்புகளால் படம் குறித்த நேரத்தில் வெளியிட முடியாமல் போனது. இதனால் மனதளவில் சோர்ந்து போன கமல் இந்த திரைப்படம் வெளியாகவில்லை என்றால் நான் நாட்டை விட்டு செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறினார்.

இதனால் ஒட்டுமொத்த திரையுலகமும் அப்போது கமல் வீட்டில் போய் நின்று அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் விஸ்வரூபம் திரைப்படம் வெளியாவதற்கு திரையுலகினர் அனைவரும் கமலுக்கு பக்கபலமாக இருந்தனர். அதன் பிறகு ஒருவழியாக விஸ்வரூபம் திரைப்படம் வெளியானது.

இதே போன்று தான் தற்போது சூர்யாவுக்கும் நிகழ்ந்து வருகிறது. சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் போன்ற திரைப்படங்களுக்கு எதிராக பல கண்டனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பியது. அரசியல் சார்பான பல பிரச்சினைகளையும் சூர்யா எதிர்கொண்டார்.

அதுமட்டுமல்லாமல் ஜெய்பீம் திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மிகவும் தாழ்மையாக காட்டி விட்டதாக சூர்யாவுக்கு எதிராக பலரும் போர்க்கொடி தூக்கினர். இதனால் வேறு வழியில்லாமல் படத்தில் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் மாற்றப்பட்டது.

ஆனால் இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையிலும் சூர்யா அதை தனியாக தாங்கி போராடி அதில் வெற்றியும் கண்டார். அவருக்கு நடந்த இவ்வளவு பிரச்சினையிலும் திரையுலகினர் யாரும் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பவில்லை. கமலுக்கு ஆதரவாக துணை நின்ற திரையுலகம் சூர்யாவுக்கு ஏன் ஆதரவு தரவில்லை என்று அவரின் ரசிகர்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்