Tamil Cinema News | சினிமா செய்திகள்
பணம் புகழுக்காக நம்பர் நாயகிகளை மிஞ்ச நினைக்கும் வாரிசு நடிகை.. உச்சகட்ட கவர்ச்சிக்கு பச்சைக்கொடி
தமிழ் சினிமாவில் நம்பர் நாயகிகள் இரண்டு பேரையும் எப்படி வீழ்த்திவிட்டு முன்னேறிச் செல்வது என பயங்கரமாக பிளான் போடுகிறாராம் வாரிசு நடிகை.
தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளில் இவர்களது சாம்ராஜ்யம்தான் நடந்து வருகிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் இருவரும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் சினிமாவை பொறுத்தவரை ராணிகள் தான். ஆரம்ப காலத்தில் அளவுக்கதிகமான கவர்ச்சி காட்டினாலும் தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள நாயகிகள் வேடத்தை தேர்வு செய்து நடித்து வருகின்றனர்.
ஆனால் இவர்கள் இருவருக்கும் சம போட்டியாக வந்துள்ளவர் அந்த வாரிசு நடிகை. கவர்ச்சி இல்லாமல் வெகு விரைவில் முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டார். இருந்தும் நடிகைக்கு பணம் மற்றும் புகழ் மீது பயங்கர போதை இருப்பதாக தெரிகிறது.
தமிழ் தெலுங்கு சினிமாக்களில் ஏற்கனவே தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட்ட இந்த நாயகியை தற்போது பாலிவுட்டில் செல்லப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதற்காக தனது பப்ளியான உடம்பை குறைத்து தற்போது எலும்பும் தோலுமாக காட்சியளிக்கிறார்.
இது ரசிகர்களுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை என அவர்கள் போடும் கமண்ட்களிலேயே தெரிகிறது. இருந்தும் நாயகி அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் உச்ச நட்சத்திரத்துடன் ஜோடி சேர்ந்துவிட்டார். ஆனால் எப்படி நம்பர் நாயகிகளை ஓரங்கட்டுவது என தெரியாமல் முழிக்கிறாராம்.
இந்த வருடத்திற்குள் அவர்கள் 2 பேரையும் மிஞ்சி நம்பர்-1 நாயகியாக மாறிவிட வேண்டும் என கங்கணம் கட்டியுள்ளறாம். மேலும் சமீபத்தில் எவ்வளவு கவர்ச்சி வேண்டுமானாலும் காட்ட ரெடி எனவும் அறிக்கை விட்டிருந்தார்.
தேசிய விருது வாங்கிய தெனாவெட்டுதான் இவரை இப்படி யோசிக்க வைக்கிறது என நம்பர் நாயகிகளிடம் அடி வாங்கிய பல நாயகிகள் முணுமுணுத்து கொண்டிருக்கின்றனராம்.
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது என்கிறார்களாம் கோலிவுட்டை சேர்ந்த ஆசான்கள்.