கேவலமான வேலை செய்து மாட்டிய 6 நடிகைகள்.. ஷகிலாவிற்கு இணையாக வந்த பிரபல நடிகை

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! தொடர்ந்து உங்களது சினிமா செய்திகளின் தேவைகளை உடனுக்குடன் நமது வலைத்தளம் தொடர்ந்து நிவர்த்தி செய்து வருகிறது. அந்த வகையில் இன்று பலான காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட அல்லது பலான விஷயம் செய்த நடிகைகளை பற்றி காணலாம். இவர்கள் எல்லாம் சட்டத்தின் பிடியில் சிக்கினாலும் சீக்கிரம் வெளியில் வந்துவிடுகிறார்கள்.

புவனேஸ்வரி: தமிழ் சினிமாவில் சில கவர்ச்சி வேடங்களிலும், பல நாடகங்களிலும் நடித்துள்ளவர் புவனேஸ்வரி. அவருடைய பெரிய மனசுக்கு ரசிகர்கள் ஏராளம். அவரை திடீரெண்டு ஒருநாள் போலீஸ் கைது செய்தது. சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி விபசாரத்தில் தள்ளியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. பதிலுக்கு புவனேஸ்வரி, பல முன்னணி நடிகைகள் பலரும் இந்த தொழில் தான் செய்கிறார்கள் என்றொரு பேட்டி கொடுக்க, அந்த பத்திரிக்கை மீது மொத்த சினிமா உலகமும் பாய்ந்தது வேறுகதை. புவனேஸ்வரி கொடுத்த லிஸ்டை கேட்காதீங்க ப்ளீஸ்.

வினிதா: சரத்குமாருடன் கட்டபொம்மன், பிரபுவுடன் வியட்நாம் காலனி போன்ற படங்களில் நடித்தவர் வினிதா. இவரை ஒரு நாள் போலீஸ் பிராத்தல் செய்யும்போது கையும் களவுமாக பிடித்தது. பின்னர் அவர்மீது எந்த குற்றமும் நிரூபிக்க பட வில்லை என்று விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு அவரது திரை வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

ஷகீலா: ஒன்றிரண்டு தமிழ் படங்களில் நடித்திருந்த ஷகீலா, மலையாள கரையோரம் ஒதுங்கினார். அங்கே அவரது உடலமைப்பிற்கு கவர்ச்சி வேடமும், ஆபாச வேடமும் தான் கிடைத்தது. அதில் அவருக்கு பெரும் பணமும், புகழும் கிடைக்க ஷகீலா அங்கேயே கடை விரித்தார். அதன் காரணமாக அந்த ஊர் சூப்பர்ஸ்டார்களான மம்மூட்டி, மோகன்லால் போன்றோரின் படங்களே மண்ணை கவ்வ ஆரமித்தது. அதனால் அவர்கள் போலீஸ், கைது என்று பயமுறுத்த, தமிழ் நாட்டில் காமெடி ரோல்களில் நடிக்க வந்துவிட்டார் ஷகீலா.

சங்கீதா பாலன்: சங்கீதா பலனை, தமிழ் தொலைக்காட்சி சீரியல்கள் பார்க்கும் அனைவர்க்கும் தெரிந்திருக்க கூடும். சென்ற வருடம் இளம் பெண்களை வைத்து விபசாரம் செய்வதாக கூறப்பட்டு கைது செய்தது போலீஸ். பின்னர் அதிலிருந்து விடுவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் சொன்னது. இவர் சன் டிவி சீரியல்கள் பலவற்றில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவேதா பாசு: ஜார்கண்டில் பிறந்த ஹிந்தி நடிகையான சுவேதா, ரா ரா உட்பட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். விபசாரம் செய்யும்போது இவர் கையும் களவுமாக மாட்டிக்கொண்டார். பின்னர் இவரும் அதெல்லாம் தவறான தகவல் என்று கூறப்பட்டு விடுவிக்கப்பட்டார். இவரும் இந்த நிகழ்வால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

ஷர்மிளா: காமெடி நடிகையாக தமிழில் சில படங்களில் நடித்துள்ளார் ஷர்மிளா. ஆவாரம்பூ படத்தில் பயில்வான் ரங்கநாதனுக்கு ஜோடியாக கூட நடித்திருந்தார். இவரும் ஷகீலா போல, மலையாள படங்களில் பலான படங்களில் நடித்தார். இவர் மீதும் விபசாரம் செய்வதாக கூறி மலையாள திரை உலகம் துரத்தி விட, இங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்