Connect with us
Cinemapettai

Cinemapettai

tamil-actress

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கவர்ச்சி ஹீரோயின்கள் கதையின் நாயகிகளாக மாறும் அதிசயம்.. உருப்படும் சினிமா வட்டாரம்

காலகாலமாக கதாநாயகிகள் சினிமாவில் ஹீரோக்களுடன் டூயட் பாடவும், கவர்ச்சி ஆட்டம் போடவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தனர். ஆனால் சமீபகாலமாக நடிகைகள் பலர் கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தும் வேடங்களிலும் நடித்து அசத்தி வருகின்றனர்.

அந்தவகையில் நயன்தாரா, அனுஷ்கா போன்றோர் கதாநாயகிகளை மையப்படுத்தி எடுத்த திரைக்கதைகளில் வெற்றி பெற்றுள்ளனர். ஒரு காலத்தில் கே. பாலச்சந்தர் பெண்களை மையப்படுத்தி திரைக்கதைகளை இயற்றி வந்தார்.

அதன்பிறகு சமீபத்திய காலத்தில்தான் ஹீரோயின்கள் காட்சிப்பொருளாக காட்டப்படாமல் கதையின் முக்கியத்துவமாக கருதப்படுகின்றனர். அந்தவகையில் அமலா பால் ஆடை என்ற படத்தில் நிர்வாணமாக நடித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சமந்தா மற்றும் சாய்பல்லவி ஆகியோர் மிகவும் வித்தியாசமான கதைகளில் நடித்து வருகின்றனர்.

சாய் பல்லவி தெலுங்கில் உருவாகும் பருவ வருடம் 1992 என்ற படத்தில் பெண் நக்சலைடாக நடித்து வருகிறார். முற்றிலும் மேக்கப் அற்ற தோற்றத்தில் படம் நெடுக வருகிறார். அதேபோல் அஞ்சான் படத்தில் வில்லனாக நடித்த மனோஜ் பாஜ்பாய் அவர்களின் ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

தற்போது இதனுடைய இரண்டாவது பாகத்தில் பெண் தீவிரவாதியாக சமந்தா நடிக்க உள்ளார். மேலும் பிரியாமணி, சந்தீப் கிஷன் ஆகியோரும் இதில் இடம் பெற்றுள்ளனர். ஆகையால் கவர்ச்சி இல்லாமல் கதையோடு வருகிற திரைப்படங்களை ஆதரிக்க வேண்டியது நம் கடமை அல்லவா.!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top