priyanka-tamarai

கேப்டனுக்கு நீ தகுதி இல்ல.. பிக்பாஸில் பிரியங்காவுடன் மல்லுக்கட்டும் தாமரை

பிக் பாஸ் சீசன் 5 ல் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிரியங்கா மற்றும் தாமரை இருவரும் இந்த வார பிக் பாஸ் வீட்டின் தலைவரைப் பற்றி வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

பிரியங்கா, தாமரையிடம் வாய்ப்பு என்று ஒண்ணு வரும்போதுதான் நீ கசப்புகளை சரி பண்ண வேண்டுமா, முதலிலேயே அதை சரி செய்தால் என்ன என்று கேட்கிறார். இதற்கு தாமரை, பிரியங்கா என்ன சொல்ல வருகிறார் என்று கேட்காமலேயே எந்த கசப்பை சரி செய்ய வேண்டும் என்று கோபமாக கேட்கிறார்.

உடனே பிரியங்கா பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சில கசப்பான நிகழ்வுகளை நீ சரி பண்ண வேண்டும் என்கிறார். ஆனால் தாமரை பிரியங்காவை முழுமையாக பேசவிடாமல் நான் வீட்டில் சரியாக வேலை செய்யாமல் இருக்கிறேனா என்று எதிர் கேள்வி கேட்கிறார்.

மேலும் சம்பந்தமில்லாமல் பேசாதே என்று பிரியங்காவை எச்சரிக்கிறார். அதற்கு பிரியங்கா நீ இந்த வீட்டின் கேப்டனாவதற்கு இப்பொழுது தகுதி இல்லாதவள் என்று சொல்கிறார். உடனே தாமரை அதை சொல்வதற்கு உனக்கு தகுதி இல்லை என்று கோபமாக பேசுகிறார்.

தாமரையுடன் மல்லுக் கட்ட முடியாமல் பிரியங்கா ஒரு ஓரமாக சென்று அமர்ந்து விடுகிறார். இவர்களின் இவ்வளவு சண்டையிலும் சக போட்டியாளர்கள் அனைவரும் அமைதியாக இருக்கின்றனர். ஏனென்றால் தாமரையிடம் பேசுவது சரியாக வராது என்று அனைவரும் ஒதுங்கி நிற்கின்றனர்.

தாமரையின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. மேலும் அவர் உச்சகட்ட மன அழுத்தத்தில் இருப்பதை போன்று தெரிகிறது. தாமரை பிக்பாஸ் வீட்டை விட்டு விரைவில் வெளியேறுவது அவர் உடல் நலத்திற்கு நல்லது.

isaivani-bigg-boss

இசைவாணியை கமலிடம் போட்டுக்கொடுத்த போட்டியாளர்கள்.. வார்னிங் கொடுக்கப்பட்ட முதல் கேப்டன்

பிக் பாஸ் சீசன் 5 இன்றைய நாளுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் கமல் போட்டியாளர்களிடம் இந்த வார கேப்டன் இசைவாணி எவ்வளவு நல்ல கேப்டனாக இருந்தார் என்று கேட்கிறார்.

அதற்கு போட்டியாளர்கள் அனைவரும் இசைவாணி ஒரு நல்ல கேப்டனாக இல்லை என்று பதிலளித்தனர். ஒவ்வொருவரும் காரணத்தை சொல்ல சொல்ல இசைவாணியின் முகம் முதலில் அதிர்ச்சியை காட்டியது. பின்னர் கவலையான முகத்துடன் அமர்ந்திருந்தார்.

அதிலும் தாமரை, இசைவாணி சாப்பாடு பரிமாறும் போது அன்பாக செய்யாமல் கொஞ்சம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக கூறினார். இதைக் கேட்ட இசைவாணி அடிப்பாவி என்பது போல் தாமரையைப் பார்த்தார்.

அனைவருடைய கருத்தையும் கேட்ட கமல், இசைவாணியிடம் முதன் முதலாக வார்னிங் கொடுக்கப்பட்ட கேப்டன் நீங்கள் தான் என்று கூறினார். அதற்கு இசைவாணி பதில் பேச முடியாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தார்.

சில நாட்களாக இசைவாணியின்  நடவடிக்கையில் கொஞ்சம் மாற்றம் தெரிகிறது. அதாவது ஆரம்பத்தில் பிக் பாஸ் வீட்டிற்கு வரும்போது இருந்த இசைவாணி ரொம்பவும் பாவப்பட்ட முகமாக தெரிந்தார்.

ஆனால் தற்போது இருக்கும் இசைவாணி கொஞ்சம் அகங்காரத்துடன் இருக்கிறார். இமான் அண்ணாச்சி கொடுத்த கிரீடத்தை தலையில் போடாமல் தூக்கி எறிந்ததே அதற்கு ஒரு உதாரணம் ஆகும்.

மேலும் ராஜுவிற்கு தேவையில்லாத ஆணியை புடுங்குபவர் என்ற பட்டத்தை கொடுத்தவர் இசைவாணி. தற்போது அவரே வீட்டில் தேவையில்லாத ஆணியாக மாறிவிட்டார்.

niroop-varun

அசிங்கமாக கேம் ஆடிய நிரூப் வீடியோ.. யார் பெருசுன்னு அடிச்சு காட்டுங்க ப்ரோ

பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு வித்தியாசமான டாஸ்க் ஒன்று தரப்பட்டுள்ளது. அதாவது போட்டியாளர்கள் அவருக்கு விளையாடாமல் மற்றவர்களுக்காக விளையாட வேண்டும்.

இதில் ஒவ்வொரு போட்டியாளரை குறிக்கும் ஒரு பொம்மை கார்டனில் வைக்கப்பட்டிருக்கும். மணி அடித்ததும் போட்டியாளர்கள் தங்களுடைய பொம்மையை விட்டுவிட்டு மற்றவர்களின் பொம்மையை எடுத்துக் கொண்டு ஓட வேண்டும்.

யாருடைய பொம்மை கடைசியாக வருகிறதோ அவர்கள் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்பதுதான் டாஸ்க். இதற்காக பொம்மையை எடுக்கும் போது வருண் மற்றும் நிரூப்  இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது.

அதனால் ஒருவருக்கொருவர்  வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர் . வருண், நிரூப்பை பார்த்து உனக்கு அசிங்கமா இல்லையா என்று கேட்கிறார். இதனால் கோபமடைந்த நிரூப் பதிலுக்கு வருணை திட்டுகிறார். அவர்கள் சண்டையை மற்ற ஹவுஸ் மேட்ஸ் தடுக்கின்றனர்.

ஆனாலும் இருவரும் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர். இந்தக் காட்சிகளுக்கு இடையே அவ்வப்போது அக்ஷராவையும் காட்டுகின்றனர். இதை வைத்து பார்க்கும் பொழுது வருண் அக்ஷராவுக்காக  விளையாடுகிறார் என்று தோன்றுகிறது.

சமீபகாலமாக அதிகமாக கோபப்படும் வருண் இன்றைய ப்ரோமோ வில் சற்று அதிகமாகவே கொந்தளிப்பில் உள்ளார். இதற்கு முழு காரணம் என்ன என்று இன்றைய எபிசோடை பார்த்தால் தெரியவரும்.