விக்ரம் 3ல் சூர்யாவின் கதாபாத்திரம் இதுதான்.. இது என்ன புது உருட்டா இருக்கு

தற்போது ரசிகர்களின் அமோக வரவேற்பினை பெற்று தியேட்டர்களில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் விக்ரம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா ஒரு கேமியோ ரோலில் நடித்து அசத்தி இருந்தார். நட்பின் அடிப்படையில் இதில் நடித்துக் கொடுத்த சூர்யா இந்த படத்திற்காக சம்பளம் எதுவும் வாங்கவில்லை.

இந்த படத்தில் கொடூர வில்லனாக மிகவும் துணிச்சலாக இந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூர்யாவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் ஆனால் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முன்பாகவே லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்திற்கான கதையை சூர்யாவிடம் கூறி ஒப்புதல் வாங்கி விட்டாராம்.

ஏனென்றால் சூர்யா தற்போது சமூக கருத்துக்களை கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படியிருக்கும்போது போதைப்பொருள் கடத்தல் சம்பந்தப்பட்ட இந்த கதையில் நடிப்பதற்கு அவர் மிகவும் யோசித்திருக்கிறார். அதனால் லோகேஷ் கனகராஜ் அடுத்த பாகத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் வில்லன் கிடையாது என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.

அதாவது சூர்யாவின் இமேஜ் கெடாதவாறு அவருடைய கேரக்டரை இயக்குனர் உருவாக்கியிருக்கிறார். மேலும் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தை சூர்யா பல நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்துவது போன்று அவருடைய கேரக்டரை அடுத்த பாகத்தில் காட்ட இருக்கிறாராம்.

இதையெல்லாம் கேட்ட பிறகுதான் சூர்யா இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார். இதனால் சூர்யாவின் ரோலஸ் கதாபாத்திரத்தை அடுத்த பாகத்திலும் படு மிரட்டலாக காண இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் கிடைத்துள்ளது.

ஆனால் அந்த கேரக்டர் நல்லவர் என்று இறுதியில் தான் தெரிய வருமாம். அதற்கிடையில் சூர்யா மற்றும் கமல் ஆக்ரோஷமாக மோதும் சண்டைக் காட்சிகளும் இடம் பெற இருக்கிறது. இதனால் இந்த விக்ரம் திரைப்படத்தை விட பல மடங்கு டிவிஸ்டுகளோடு அடுத்த பாகம் ரெடியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்