நடுக்கடலிலேயே இருக்கும் சூர்யா.. ராக்கெட் வேகத்தில் புத்தியை தீட்டிய பாலா

சூர்யாவின் 41 வது படத்தை பாலா இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி சில தினங்களாக நடந்து வருகிறது. அண்மையில் சூர்யா அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார்.

இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் கீர்த்தி ஷெட்டியும், மலையாள நடிகை மமிதா பைஜூவும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் சூர்யா மீனவராக நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.

இதனால் கடற்கரை ஓரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்த பிறகு ஹோட்டலில் தங்குவதற்காக படக்குழு திட்டமிட்டுள்ளனர். ஆனால் அங்கு பெரிய அளவில் ஹோட்டல்கள் எதுவும் இல்லை. பிரம்மாண்ட ஹோட்டலுக்கு செல்ல வேண்டும் என்றால் பல மைல் தூரம் தாண்டி தான் செல்ல வேண்டும்.

ஆனால் அங்கு தங்கினால் படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வர முடியாது. இதனால் படப்பிடிப்பு தாமதம் ஏற்படும். இதனை பார்த்த இயக்குனர் பாலா கடற்கரை ஓரமாகவே நான்கு வீடுகள் கட்ட சொல்லி இருக்கிறாராம். படப்பிடிப்பு முடிந்தபின் படக்குழு அந்த வீட்டிலேயே தங்கிக் கொள்ளலாம் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இதனால் பாலா இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்தவுடன் இந்த வீடுகளை அப்படியே கடற்கரை மீன்வர்களிடம் ஒப்படைத்து விட சொல்லி இருக்கிறாராம். தற்போது இந்த விஷயத்தை அவரது ரசிகர்கள் மற்றும் மீனவர்கள் பாராட்டி வருகின்றனர்.

மேலும் சூர்யா சினிமாவை தாண்டி பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். அந்த வகையில் மீனவர் குடும்பத்திற்கு உதவும் நோக்கில் பாலா இந்த செயல் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. மேலும் பல நடிகர்களுக்கு முன்உதாரணமாக பாலா உள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்