சூர்யா படத்திற்கு A சான்றிதழ்.. இந்த படத்தை பார்த்து ஆடிப்போன சென்சார் போர்டு

தமிழ் சினிமாவில் சூர்யா அடுத்த இன்னிங்சை தொடங்கியுள்ளார்.  தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் சூர்யா தற்போது பாண்டிராஜ் உடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

சமூக கருத்துக்களை வெளிப்படையாக கூறி வரும் சூர்யா தற்போது ஜெய்பீம் எனும் படத்தில் நடித்து வருகிறார். முதலில் இப்படத்தின் இயக்குனர் படத்தைத் தயாரிப்பதற்காக சூர்யாவிடம் படத்தின் கதையை கூறியுள்ளார். ஆனால் சூர்யாவிற்கு ஜெய்பீம் படத்தின் கதை பிடித்துப்போக நானே நடிக்கிறேன் என கூறிவிட்டார்.

இயக்குனர் சரி என ஒப்புக்கொண்டார். இப்படத்தை சூர்யாவின் தனது சொந்த நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். மேலும் இப்படத்தில் குடிசை வாழ்க்கை மனிதர்களின் வாழ்க்கையை படமாக எடுக்கப்பட்டு உள்ளது.

jai-bheem-cinemapettai
jai-bheem-cinemapettai

அதாவது சூர்யா குடிசை மக்களுக்காக போராடும் ஒரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் யாரும் பேசுவதற்கு பயந்த விஷயங்களை கூட வெளிப்படையாக சூர்யா பேசியுள்ளதாகவும். இப்படத்தில் இடம் பெற்ற வசனங்களும் காட்சிகளும் ரசிகர்களை பெரிய அளவில் யோசிக்க வைக்கும் எனவும் கூறி வருகின்றனர்.

படத்தில் சில சம்பவங்களை நேரடியாக விமர்சிக்கும் வகையில் இருப்பதாகவும் வசனங்களும் கொஞ்சம் ஆக்ரோஷமாக இருப்பதால்தான் இப்படத்திற்கு சென்சார் போர்டு நிறுவனம் ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தை பார்த்த சென்சார் குழு மிரண்டே போய்விட்டதாம். மேலும் இப்படத்தை கூடிய விரைவில் OTTதளத்தில் வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்