நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிட்ட சர்வைவர் ஐஸ்வர்யா.. காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்

ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சி கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இதில் டைட்டில் வின்னராக விஜயலஷ்மி தேர்வு செய்து ஒரு கோடியை தட்டிச் சென்றார். இருப்பினும் ரசிகர்கள் பலரும் ஐஸ்வர்யா வெற்றிபெறுவார் என எண்ணிக் கொண்டிருந்தனர்.

ஆனால் எதிர்பார்த்த நிலையில், திறமையாக விளையாடிய ஐஸ்வர்யா கடைசி இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்டார். இதனால் ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் சர்வைவல் நிகழ்ச்சிக்குப் பின் ஐஸ்வர்யாவிற்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது என்றே சொல்லலாம். சர்வைவருக்கு பின் ஐஸ்வர்யாவிற்கு சினிமாவில் படவாய்ப்புகளும் குவிய துவங்கவுள்ளது.

அந்த அளவிற்கு சர்வைவா நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது. தற்போது ஐஸ்வர்யா சர்வைவர் நிகழ்ச்சிக்குப் பின் வெளியிட்ட முதல் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இதை ஐஸ்வர்யா நீச்சலுடையில் கவர்ச்சியாக காட்சியளிக்கிறார்.

இதுவரை சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஒவ்வொரு போட்டியாளர்களும் முன்பிருந்த போட்டோக்களையும் தற்போதைய நிலையையும் நிலையையும் குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்த புகைப்படத்தை பதிவிட்டு கொண்டிருந்தனர்.

Aishwarya-cinemapettai
Aishwarya-cinemapettai

ஆனால் ஐஸ்வர்யா மட்டும் தன்னுடைய கலர் போனதை எல்லாம் பொருட்படுத்தாமல் அருவியில் ஆட்டம் போட்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் தண்ணீரில் தத்தளித்து விளையாடும் ஐஸ்வர்யாவை ரசிகர்கள் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

survivor-Aishwarya-cinemapettai
survivor-Aishwarya-cinemapettai

ஏற்கனவே ஐஸ்வர்யா விதவிதமான போட்டோசூட்களை நடத்தி இருந்தாலும் சர்வைவருக்குப் பின் ஐஸ்வர்யாவின் புகைப்படம் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு எக்கச்சக்கமான கமெண்ட்களையும் லைக்குகளையும் பெற்று வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்