என்னாலதான் உனக்கு மார்க்கெட் வந்துச்சு.. சூர்யாவுடன் மல்லுக்கட்டும் ஹரி

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக வெற்றி கூட்டணியாக வலம் வருபவர்கள் தான் சூர்யா மற்றும் இயக்குனர் ஹரி. இவர்கள் கூட்டணியில் வெளிவந்த ஆறு, வேல், சிங்கம் படங்கள் போன்றவை சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

அதில் சிங்கம் 3 படம் மட்டும் சரியாக செல்லவில்லை. அதனைத் தொடர்ந்து மீண்டும் சூர்யா மற்றும் ஹரி கூட்டணியில் ஒரு படம் உருவாக இருப்பதாகவும், அந்த படத்தை சூர்யாவின் உறவினர் ஞானவேல் ராஜா தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது.

அந்த படத்திற்கு அருவா என்று கூட தலைப்பு வைத்து விட்டனர். ஆனால் அடுத்த சில தினங்களிலேயே சூர்யா, ஹரி படத்தில் நடிக்க விருப்பமில்லை என சொல்லாமல் சொல்லி விட்டாராம். இதன் காரணமாக அந்த படம் கைவிடப்பட்டது.

suriya-hari-cinemapettai
suriya-hari-cinemapettai

அந்தப் பிரச்சனை நடந்துகொண்டிருந்த நேரத்தில் சூர்யாவுக்கும் இயக்குனர் ஹரிக்கும் வாய்ச்சண்டை வந்ததாக அவர்களது வட்டாரங்களிலிருந்து கூறுகின்றனர். ஹரியும் தன் பங்குக்கு என்னுடைய படங்கள்தான் உன்னுடைய மார்க்கெட்டுக்கு காரணம், அதை வாழ்க்கையில் மறந்து விடாதே என சூர்யாவை எச்சரித்ததாக கூறுகின்றனர்.

எப்போதுமே அமைதிகாக்கும் சூர்யா இந்த வார்த்தையை கேட்டதும் கொந்தளித்து விட்டாராம். அதுமட்டுமில்லாமல் ஹரி, உன்னை விட்டால் எனக்கு வேறு ஹீரோ கிடையாதா? என்று கூறி தன்னுடைய மச்சான் அருண் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

மேலும் அந்த படத்தை வெற்றிப்படமாக கொடுத்து தான் யார் என்பதை நிரூபித்துக் காட்டுகிறேன் என சூர்யாவிடம் சபதமிட்டு சென்றுள்ளாராம் இயக்குனர் ஹரி. அந்த சபதத்தை நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்