சூர்யா 41 திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறுத்தப்படவுள்ளதாகவும் தற்போது நடிகர் சூர்யாவின் மார்க்கெட் எகிரியதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூர்யா,ஜோதிகா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மையமாக கொண்ட கதையாக இயக்குனர் பாலா, சூர்யா 40 திரைப்படத்தை இயக்கி இருந்தார். மேலும் அப்பா,மகன் சூர்யா எனவும் இருவேட கதாபாத்திரம் எனவும் படப்பிடிப்பு ஆரம்பித்திருந்தது.
நடிகர் சூர்யாவின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு நந்தா, பிதாமகன் உள்ளிட்ட திரைப்படங்கள் முக்கியமான படங்களாக பார்க்கப்படும். இத்திரைப்படத்தை இயக்கிய பாலா தற்போது மீண்டும் சூர்யாவுடன் இணைந்த போது அனைவருக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே சமீபத்தில் சூர்யாவிற்கும் ,பாலாவிற்கும் படப்பிடிப்பின்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட நிலையில், சூர்யா கோபப்பட்டு கிளம்பினார் அதிலிருந்து சூர்யா சமாதானமாகி பாலாவிடம் வந்து படத்தை நடித்துக் கொடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது வரை சூர்யா இறங்கி வரவில்லை.
மேலும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான சமீப காலமாக வந்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றியடைந்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வரும் நிலையில், சூர்யாவிற்கு பாலாவின் திரைப்படம் அவ்வளவு முக்கியமாக பார்க்கப்படவில்லை. மேலும் விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக ரோல்ஸ் கதாபாத்திரத்தில் நடித்ததையடுத்து அவரது மார்கெட் பல மடங்கு எகிறியுள்ளது.
இதனிடையே பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடிக்க போவதில்லை என்று 99 சதவிகிதம் உறுதியாகியுள்ளது. மேலும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சூர்யா 41 திரைப்படத்தை தயாரித்த நிலையில் சூர்யாவிற்கு அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தற்போது சூர்யா 41 திரைப்படம் முற்றிலுமாக நிறுத்தப்படும் செய்தியைக் கேட்டு தமிழ் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.