23 வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் வில்லி நடிகை.. அதிரப் போகும் திரையரங்கம்!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் சிறுத்தை சிவா இயக்கினார்.

ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. தற்போது தலைவர் 169-வது படத்தை இயக்க நெல்சன் திலீப் குமார் உள்ளார். இந்த சூழலில் ஏற்கனவே நெல்சனின் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை.

அதேபோல்  சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த படமும் தோல்வி அடைந்தது. அதனால் இவர்கள் இருவரும் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக ரஜினி படத்தின் கதை மற்றும் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் என ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறார்.

தற்போது தலைவர் 169 படத்தில் ரம்யா கிருஷ்ணன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். கடந்த 1999 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான படையப்பா படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்து பட்டையைக் கிளப்பி இருப்பார். இந்த படம் வெளியான பிறகு ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன் எந்த படமும் நடிக்கவில்லை. 23 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் நடிக்க உள்ளார்.

இவர்களது காம்போ பக்காவாக ஒர்க் அவுட் ஆகும் என தலைவர் 169-வது படத்தில் ஏற்கனவே திரைக்கதை எழுத நெல்சனுடன் இணைந்திருக்கும் கேஎஸ் ரவிக்குமாரின் உந்துதலால் ரம்யா கிருஷ்ணன் இந்த படத்தில் தேர்வு செய்யப்பட்டு இருக்கலாம். இவரைத் தவிர ஐஸ்வர்யாராய், பிரியங்கா மோகன், கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆகியோரும் பேச்சுவார்த்தையில் இருப்பதால் அடுத்தடுத்து இந்த படத்தில் இணைய வாய்ப்பு இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்