ஒரே கேள்வியால் விஜய் டிவி பிரபலத்தை மடக்கிய ரசிகர்.. சூடுபிடிக்கும் விவாதம்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் என்கின்ற ரியாலிட்டி ஷோ ஆனது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதன் விளைவாக தற்போது 8-வது சீசன் ஆனது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் போட்டியாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு,

சின்னக்குயில் சித்ரா, உன்னி கிருஷ்ணன், அனுராதா, பென்னி 4 நடுவர்கள் மத்தியில் போட்டியிடுகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களால் அதிகம் விரும்பக்கூடிய ஸ்ரீதர் சேனா என்ற போட்டியாளர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதற்கு முழு காரணம் நடுவர் பென்னியின் தீர்ப்புதான், என்று சமூக வலைதளங்களில் பென்னியை பெரிதும் விமர்சித்தனர்.  அதில் அதிர்ச்சி அடைந்த பென்னி, இனி சூப்பர் சிங்கர் மேடையில் எதுவும் பேசமாட்டேன். மேலும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் எண்ணமும் இல்லை என்று நடப்பு சீசனில் இருந்து வெளியேறி உள்ளார்.

இதுதொடர்பாக பல விவாதங்கள் உள்ள நிலையில் கடந்த வாரம் ஓணம் பண்டிகையை கொண்டாடிய பென்னி ஒரு சில பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றினார். அப்பொழுது ரசிகர் ஒருவர், ‘யாரை வெளியேறுவதாக தீர்மானித்துள்ளீர். சூப்பர் சிங்கர் சீசன் 8-ல் யார் வெற்றியாளர் என்பதை தேர்ந்தெடுத்து விட்டீர்கள் அல்லவா?’ என்று காட்டமாக விமர்சனம் செய்தார்.

இதற்கு பதில் அளித்த பென்னி, ‘இது ஒரு ஓணம் பண்டிகைக்காக போடப்பட்ட பதிவு மட்டுமே, வரும் வாரங்களில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் யாரெல்லாம் இறுதி சுற்றிற்கு முன்னேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

benny-super-singer
benny-super-singer

மேலும் வைல்ட் கார்டு சுற்றின் மூலம் ஸ்ரீதர் சேனா மீண்டும் வருவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது’ என்று பதிவிட்டிருந்தார். இப்படி தொடர்ந்து பென்னியும் சூப்பர் சிங்கர் ரசிகர்களும் காட்டமான விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்