அம்மா அருகில் இருந்த போதே இப்படி ஒரு கொடுமையா.! கவர்ச்சி புயலின் ஆவேசம்

தமிழ் சினிமாவில் நிறைய அடல்ட் படங்களை நடித்து இளசுகளை வசியம் செய்தவர்தான் அந்தக் கவர்ச்சி புயல் நடிகை. இவர் என்னதான் குடும்ப ரசிகைகளின் வெறுப்புகளை சம்பாதித்தாலும் கவர்ச்சி நடிகையாக சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் தான் அந்த கவர்ச்சி புயல்.

இவர் சினிமாவில் இருக்கும் போது உடன் நடிக்கும் நடிகர்கள் மட்டுமல்ல பொது இடங்களிலும் நிறைய பேர் அவரை சீண்டிப் பார்த்திருக்கின்றனர். அதுவும் அவருடைய அம்மா உடன் இருக்கும்போதே அந்த கொடுமை நடந்திருக்கிறது. இந்த அத்துமீறலை இன்று வரைக்கும் அவரால் ஜீரணிக்க முடியவில்லை.

Also Read: தள்ளாத வயதிலும் நடிகையை அடைய நினைத்த அரசியல் பிரபலம்.. கடைசியில் உயிர் போன பரிதாபம்

அந்தக் கவர்ச்சி புயல் ஒருமுறை அவருடைய அம்மாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அப்போது டாக்டர் எழுதிக் கொடுத்த சீட்டு அவருக்கு புரியவில்லை. இதனால் மீண்டும் மருத்துவரிடம் சென்று கேட்டபோது, அவர் திடீரென்று அந்த நடிகையின் பக்கத்தில் வந்து தொடக்கூடாத இடத்தில் தொட்டு விட்டார்.

இதனால் கோபம் அடைந்த அந்த நடிகையும், அங்கேயே அந்த மருத்துவரை அறைந்து, மோசமாக திட்டி இருக்கிறார். இந்த கொடுமை எல்லாம் அவருடைய அம்மா அருகில் இருக்கும் போதே நடந்திருக்கிறது என வேதனையுடன் தெரிவித்து இருக்கிறார்.

Also Read: விடிய விடிய வேட்டையாடிய நடிகர்.. கந்தல் துணியாகி போன நடிகை

சினிமாவில் இருக்கும் கவர்ச்சி நடிகைகளை படத்தில் பார்ப்பது போலவே நிஜ வாழ்க்கையிலும் இருக்க வேண்டும் என நினைப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தற்போது அந்த நடிகை கொந்தளிக்கிறார். கவர்ச்சி நடிகைகளுக்கு எங்கு போனாலும் பாதுகாப்பே இல்லை என்றும் அவர் ஆவேசப்படுகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்