நாசூக்காக எஸ்கேப்பான இளையராஜா.. பெரிய மனுஷன் பண்ற வேலையா இது!

பல மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர் எஸ் பி பாலசுப்பிரமணியம். இவர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் முன்னணி பாடகராக வலம் வந்தவர். எஸ்பிபி பல்வேறு நாடுகளில் லைவ் ஷோக்களில் பாடல்கள் பாடி வந்தார்.

இந்த கச்சேரியில் பெரும்பாலும் இளையராஜா இசையமைத்த பாடல்களை தான் எஸ்பிபி பாடி வந்தார். ஏனென்றால் இளையராஜா, எஸ்பிபி கூட்டணியில் பழமொழிகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் வெளிவந்துள்ளது. இவர்களிடையே பலவருட நட்பு இருந்தது.

இந்நிலையில் லைவ் ஷோக்களில் பாடும் பாடகர்கள் தனக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் என சில பாடகர்களுக்கும் இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார். அதில் எஸ்பிபிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. அப்போது பல கச்சேரிகளை கமிட் செய்திருந்த எஸ்பிபி செய்வதறியாமல் இருந்தார்.

வாழ்க்கையில் அனைத்தையும் துறந்த வரை தான் நாம் உலகத்தில் நானி என்போம். ஆனால் என் பாட்டை மற்றவர்கள் பாடி சம்பாதிக்கக் கூடாது என எல்லோர் வயிற்றிலும் அடித்தவர் நம் இசைஞானி இளையராஜா. என் பாடலை பாடுவதற்கு எனக்கு காசு வேண்டும் எனக் கேட்ட இளையராஜாவின் இந்தக் கருத்தை எதிர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு மேடையில் தட்டிக் கேட்டார்.

ஏனென்றால் அந்த காலகட்டத்தில் ரஜினியின் இன்ட்ரோ பாடல்களை எஸ்பிபி தான் பாடுவார். படத்தின் வெற்றிக்கும் எஸ்பிபி பாடல்களும் மிக முக்கிய காரணமாக இருக்கும். படையப்பா, முத்து, அருணாச்சலம், சந்திரமுகி என ரஜினியின் பல வெற்றிப் படங்களில் எஸ்பிபி யின் பாடல் கண்டிப்பாக இடம் பெற்றது.

அதன்பிறகு இளையராஜா ராயல்டி நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தார். அதன்பின்னர் எஸ்பிபி, ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் அமைப்புகளிடம் இளையராஜாவுக்குறிய ராயல்டியை கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். அதன்பிறகு இளையராஜாவின் பாடல்களை எஸ்பிபி பாடத் தொடங்கி பிரச்சினை சுமுகமாக முடிந்தது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்