Connect with us
Cinemapettai

Cinemapettai

bigil-sah-saira-reddy

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இரண்டே மாதத்தில் 300 கோடி திரைப்படத்திற்கு வந்த நிலைமை.. நஷ்டத்தால் ஏற்பட்ட சோகம்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. நல்ல வெற்றிப் படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் போதே திடீரென அரசியலில் ஆர்வம் கொண்டு சினிமாவை விட்டு விலகினார். அரசியலில் நினைத்த அளவு வெற்றி பெற முடியவில்லை.

இதனால் சினிமா பக்கம் திரும்பிய இவர் விஜய் நடித்த கத்தி பட தெலுங்கு ரீமேக்கில் நடித்தார். இந்தப் படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனால் தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டிய சிரஞ்சீவி அடுத்த படத்தை அவரின் மகனான ராம்சரண் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாரித்தார்.

சைரா நரசிம்ம ரெட்டி என்ற சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் வெறும் 230 கோடி மட்டுமே வசூலித்தது. இதனால் சுமார் 70 கோடிக்கும் மேல் நஷ்டத்தை சந்தித்த தயாரிப்பாளர் ராம் சரண், இந்த படத்தை இணையதளங்கள் மற்றும் டெலிவிஷன்களில் ஒளிபரப்ப அனுமதி கொடுத்தார்.

ஒரு படம் வெளியான பிறகு குறிப்பிட்ட நாட்கள் கழித்து இணையதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப வேண்டும் என சட்டம் உள்ளது. ஆனால் தனது நஷ்டத்தை சரிகட்ட படத்தை ஒளிபரப்ப அனுமதி கொடுத்தது கண்டிக்கத்தக்கது எனவும், இது வருங்காலத்தில் தியேட்டர்களுக்கு அழிவு என்பதைக் குறிப்பதாகவும் ஒரு கூட்டம் கத்திக்கொண்டு உள்ளது.

300 கோடி என சொன்னாலே பிரச்சனை தான் போல.!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top