தகராறில் ஈடுபடும் பாரதிகண்ணம்மா.. ஆத்திரத்தில் சௌந்தர்யா எடுத்த முடிவு!

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் பள்ளியில் அழைத்து சென்ற சுற்றுலாவிற்காக பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் அவர்களுடைய இரண்டு மகள்களுடன் மகிழ்ச்சியாக சென்று வந்தனர். அங்கு நான்கு பேரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட எடுத்த புகைப்படத்தை சௌந்தர்யா பிரேம் போட்டு வீட்டில் மாட்ட வேண்டும் என ஆசைப்படுகிறாள்.

எனவே இதைப் பார்த்த பாரதி கோபத்தின் உச்சத்துக்கே சென்று அந்த போட்டோவை கையில் வைத்திருந்த அகிலனுடன் கைகலப்பில் ஈடுபடுகிறான். இருப்பினும் சௌந்தர்யா ஏதேதோ சொல்லி சமாளித்தாலும் பாரதி அதை ஏற்க மறுத்து அந்த போட்டோவை வாங்கி தூக்கியெறிய முயற்சிக்கிறான்.

இருப்பினும்  பாரதி மனதில் இரண்டு பிள்ளைகளுடனும் கண்ணம்மாவுடனும் வாழ வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், கண்ணம்மாவின் மீது இருக்கும் சந்தேகத்தால் கோபம் அதிகமாகி என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் கோபத்தை வீட்டில் இருப்பவர்களிடம் காட்டிக் கொண்டிருக்கிறான்.

இதன்பிறகு சௌந்தர்யா ஹேமாவின் மீது பாரதிக்கு இருக்கும் பாசத்தை வைத்து இந்தப் புகைப்படம் இங்கு தான் இருக்க வேண்டும் என்பது ஹேமாவின் ஆசை என பாரதியின் வாயை சௌந்தர்யா அடைகிறாள். அந்த சமயத்தில் சௌந்தர்யா உடன் கல்லூரியில் படித்த நண்பர் ஒருவர் வீட்டிற்கு வர உள்ளதால் இந்த பிரச்சினையை அப்போது அப்புறம் பேசலாம் என போட்டோவை வாங்கி வைத்துவிட்டு பாரதியை அனுப்புகின்றனர்.

சௌந்தர்யா வீட்டிற்கு வரும் புதிய வரவு சௌந்தர்யா மற்றும் அவருடைய கணவருடன் கல்லூரியில் படித்ததால் பல சுவாரசியமான சம்பவங்களை குடும்பத்துடன் அந்த நண்பர் பகிர போகிறார்.

மேலும் வெண்பாவிற்கு ஏற்கனவே ஒரு ஜோசியர் உன்னை விரும்பும் நபர் உன்னைத் தேடி வருவார் என சொல்லியிருக்கும் நிலையில் அந்த நபர் சௌந்தர்யாவின் நண்பராக இருக்குமோ என ரசிகர்கள் யூகிக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்