கேஜிஎப் , புஷ்பா படத்தில் ஒத்துப்போகும் தரமான 4 சம்பவங்கள்.. இத்தனை நாள் இது தெரியாமல் போச்சு

பொதுவாக சினிமாவில் ஒரு திரைப்படம் வெற்றி அடைந்தால் அந்த கதையை தழுவி பல திரைப்படங்கள் வெளி வருவது உண்டு. அந்த வரிசையில் கன்னட முன்னணி நடிகர் யாஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கேஜிஎஃப்.

இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது. இதில் யாஷுன் இணைந்து ஸ்ரீநிதி ஷெட்டி, தமன்னா, மௌனி ராய் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படம் கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி மற்றும் மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் வெளியானது.

இந்த படத்தை போன்றே சில ஒற்றுமைகள் உடன் உருவான திரைப்படம் தான் புஷ்பா. தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த இரண்டு படத்திற்கும் ஒரு சில விஷயங்கள் ஒன்றாக அமைந்துள்ளன. அதாவது கே ஜி எஃப் திரைப்படத்தில் தங்கக் கடத்தல் பற்றிய கதை அமைக்கப்பட்டிருக்கும். அதேபோன்று புஷ்பா திரைப்படத்தில் செம்மர கடத்தல் பற்றிய கதை கரு உருவாக்கப்பட்டிருக்கும்.

மேலும் இரண்டு படங்களிலுமே அம்மா சென்டிமென்ட் மற்றும் சில பிராண்ட் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கும். இது தவிர இரண்டு படத்திலுமே தென்னிந்திய சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகளான தமன்னா மற்றும் சமந்தா இருவரும் ஒரு பாடலுக்கு கிளாமர் டான்ஸ் ஆடி இருப்பார்கள்.

இப்படி சில ஒற்றுமைகள் உடன் வெளிவந்த இந்த இரண்டு திரைப்படங்களின் அடுத்த பாகம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்த இரண்டு படங்களும் அனைத்து மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. ஆனால் புஷ்பா திரைப்படத்தை காட்டிலும் கேஜிஎப் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பல கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்