விஜய் சேதுபதியை சிலர் கெடுக்க நினைக்கிறார்கள்.. ஓப்பனாக மேடையில் போட்டுடைத்த பிரபல நடிகர்

தமிழ் சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பு மூலம் மாபெரும் வளர்ச்சி பெற்ற நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி மட்டுமே. விஜய் சேதுபதியின் நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பு திறமையால் தற்போது தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகிலும் கால் பதித்துள்ளார். தற்போது கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்துள்ள விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள லாபம் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

தமிழ் சினிமாவில் இயற்கை, ஈ, பேராண்மை, பொதுவுடமை எனும் புறம்போக்கு உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் தான் லாபம் படத்தையும் இயக்கி உள்ளார். ஆனால் இப்படமே அவரது இறுதிப் படமாக அமையும் என யாரும் எதிர்பார்க்கவே இல்லை. லாபம் படம் முடிவடைந்த நிலையில் இயக்குனர் ஜனநாதன் திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணம் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஜனநாதனின் இறுதி படமான லாபம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இது பத்திரிக்கையாளர் சந்திப்பாக அல்லாமல் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுக்கு இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியாகவே மாறியது. இங்கு வந்திருந்த அனைத்து நடிகர்களும் எஸ்.பி.ஜனநாதன் குறித்த தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். நடிகர் விஜய் சேதுபதியும் மிக உருக்கமாக பேசி கண்கலங்கினார்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது இயக்குனரும் குணச்சித்திர நடிகருமான சித்ரா லட்சுமணன் நடிகர் விஜய் சேதுபதி குறித்து பேசியிருந்தார். அப்போது அவர் கூறியதாவது, “சினிமாவில் பலரும் விஜய் சேதுபதியை நடிகர் ஜெய்சங்கர் உடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள். ஜெய்சங்கர் நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர். அதைப் போல தான் விஜய் சேதுபதியையும் சிறந்த மனிதராக நான் பார்க்கிறேன்.

chitra-laxmanan
chitra-laxmanan

சினிமாவில் ஒருவர் நல்லவராக இருந்தால் அவரை கெடுப்பதற்காக ஒரு கூட்டம் இருக்கும். எனவே விஜய் சேதுபதி கவனமாக இருக்க வேண்டும். உதவி செய்யும் உங்கள் குணத்தை விட்டுடாதீர்கள்” என கூறினார். நடிகர் விஜய் சேதுபதியை கெடுக்க ஒரு கூட்டம் உள்ளது என நடிகை சித்ரா லட்சுமணன் யாரை குறிப்பிடுகிறார் என்பதே தற்போது கோலிவுட் வட்டாரத்தில் டாப்பிக்காக உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்